சொல்லதிகாரம்186முத்துவீரியம்

(வ-று.) ‘பசப்பூரும்மே’ (கலி - 7) ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ (குறள் - 406)
(33)

இசைப்பு, இயைபு

676. இசைப்பிசை யியைபே புணர்ச்சியா கும்மே.

(இ-ள்.) இசைப்பென்பது - இசையும், இயையென்பது-புணர்ச்சியும் தரும்.

(வ-று.) யாழிசையூப்புக்கு, இயைந்தொழுகும். (34)

அலமரல், தெருமரல்

677. அலமரல் தெருமர லாகுஞ் சுழற்சி.

(இ-ள்.) அலமரலென்பதும், தெருமரலென்பதும் சுழற்சியாகிய குறிப்பைத்
தெரிவிக்கும்.

(வ-று.) ‘அலமரலாயம்’ (ஐங் - 66) ‘தெருமரலுள்ளம்’. (35)

மழ, குழ

678. 1 மழவுங் குழவு மிளமைப் பொருள.

(இ-ள்.) மழவென்பதும், குழவென்பதும், இளமைக் குறிப்பை யுணர்த்தும்.

(வ-று.) ‘மழகளிறு’ (புறம்-38) ‘குழக்கன்று’ (நாலடி-101) (36)

சீர்த்தி, மாலை

679. சீர்த்தி மிகுபுகழ் மாலை யியல்பே.

(இ-ள்.) சீர்த்தியென்பது, மிகுந்த புகழையும், மாலையியல்பையுந் தரும்.

(வ-று.) ‘வயக்கஞ்சால்சீர்த்தி’, ‘இரவரன்மாலையம்’. (குறிஞ்சிப்-239) (37)

கூர்ப்பு, கழிவு

680. 2 கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்.

1. தொல் - சொல் - உரி - 15.

2. ’’ ’’ ’’ 18.