சொல்லதிகாரம் | 189 | முத்துவீரியம் |
(வ-று.) ‘நெல்லுகுத்துப்
பரவுங் கடவுளு மிலவே’ (புறம்-335) ‘கைதொழூஉப்
பழிச்சி’
(மதுரைக் காஞ்சி - 665). (46)
மிகுதிப் பொருளன
689. கடியென் கிளவி
காப்பே கூர்மை
விரைவே விளக்க மிகுதிப்
பொருள.
(இ-ள்.) கடியென்பது, காவல்,
கூர்மை, விரைவு, விளக்கம், மிகுதியாகிய குறிப்பை
யுணர்த்தும்.
(வ-று.) கடிநகர்,
கடிநுனைப்பகழி, ‘கடிவிடுதும்’ (புறம்-9) கடிமார்பன்,
கடிசெழுங்குரல். (47)
சொல்என்னும் ஒருபொருள்
உணர்த்தும் பலசொற்கள்
690. இயம்ப னுவற்சி
யிசைகூற்று விளம்பறை
பாட்டுக் கரைநொடி
பகர்ச்சி சொல்லே.
(இ-ள்.) இயம்பல், நுவற்சி,
இசை, கூற்று, விளம்பு, அறை, பாட்டு, கரை, நொடி,
பகர்ச்சி, சொல்லென்னு மொரு குணத்தை யுணர்த்தும்.
(வ-று.) இயம்பலுற்றேன், நுவலலாமே,
இசைத் தனர்புலவர், கூறலாமே,
விளம்பப்படுமே, அறைந்தனர்மாதோ, பாடலாமே,
கரையப்படுமே, நொடிக்கலாமே,
பகரலாமே. (48)
செய்யுட்குரிய சொற்கள்
691. 1 இயற்சொற்
றிரிசொற் றிசைச்சொல் வடசொல்என்
றனைத்தே செய்யு ளீட்டச்
சொல்லே.
(இ-ள்.) இயற்சொல்லும், திரிசொல்லும்,
திசைச்சொல்லும், வடசொல்லுமென
அத்துணையே செய்யுளீட்டுதற்குரிய சொல்லாவனவாம். (49)
இயற்சொல்
692. அவற்றுள்,
செந்தமிழ் நிலத்து
வழக்கொடு சிவணித்
தம்பொருள் விளக்குந்
தன்மைய வியற்சொல்.
(இ-ள்.)
மேற்கூறிப்போந்த நான்கனுள் இயற்சொல்லாவன செந்தமிழ்நிலத்து
வழக்காதற்குப் பொருந்திக்
1. தொல் - சொல். எச் - 1.
|