சொல்லதிகாரம்190முத்துவீரியம்

கொடுந்தமிழ்நிலத்துந் தம்பொருள் வழுவாம லுணர்த்துஞ் சொல்லாமென்க.

(வ-று.) நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். (50)

திரிசொல்

693. ஒருபொருள் குறித்த பலசொல் லாயும்
     பலபொருள் குறித்த வொருசொல் லாயும்
     எனவிரு பாற்றே திரிசொற் கிளவி.

(இ-ள்.) ஒருபொருளைக் குறித்துவரும் பலசொல்லும், பல பொருளைக் குறித்துவரு
மொருசொல்லுமென விருவகைப்படுந் திரிசொல்லென்க.

(வ-று.) கிள்ளை, சுகம், தத்தை இவை கிளியென்னுமொரு பொருள்குறித்த பலசொல்.
காப்பு, கூர்மை, விரைவு, அச்சம், வாசம் இவை பலபொருள் குறித்த வொருசொல், வந்தமை
காண்க. (51)

வடசொல்

694. 1 பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத் தானும்
       ஈரெழுத் தானும் இயைவன வடசொல்.

(இ-ள்.) ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவெழுத்தானும், சிறப்பெழுத்தானும்,
ஈரெழுத்தானும், இயைவன வடசொல்லாமென்க.

(வ-று.) அமலம், கமலம், பொதுவெழுத்து; சுகி, போகி, சிறப்பெழுத்து; அரன்,
ஈரெழுத்து. (52)

திசைச்சொல்

695. செந்தமிழ் நிலனைச் சேர்ந்த ஈராறு
     நிலத்தினுந் தங்குறிப் பினதிசைக் கிளவி.

(இ-ள்.) செந்தமிழ் நிலனைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங்குறித்தபொருளை
விளக்குவன திசைச்சொல்லா மென்க.

பன்னிரண்டு நிலமாவன பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு,
குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு, சீதநாடு, பூழிநாடு,
மலைநாடு.

1. நன் - சொல் - பெய - 17.