சொல்லதிகாரம் | 195 | முத்துவீரியம் |
(இ-ள்.) தரலும், வரலும்,
கொடையும், செலலும் படர்க்கையைப் பொருந்தும்,
இவற்றுள் முதலிற் கூறிய தரலும் வரலும் தன்மை
முன்னிலைகளைப் பொருந்தும்.
(வ-று.) அவனுக்குத்
தந்தான், அவனிடத்து வந்தான், அவனுக்குக் கொடுத்தான்,
அவனிடத்துச் சென்றான் எனவும்;
எனக்குத் தந்தான், என்னிடத்து வந்தான், உனக்குத்
தந்தான், உன்னிடத்து வந்தான் எனவும் வரும். (65)
யாது, எவன்
708. யாதெவ னறியாப்
பொருளொடு சிவணும்.
(இ-ள்.) யாதும், எவனும்,
அறியாப்பொருட்கண் வினாவாக நிலையுமென்க.
(வ-று.) இச்சொற்குப்
பொருள் யாது; இச்சொற்குப் பொருளெவன். (66)
யாது என்பதற்குச் சிறப்பு
விதி
709. அவற்றுள்,
யாதுஐய நீக்கற்
பொருளொடு நிலையும்.
(இ-ள்.) முற்கூறிய
இரண்டனுள் யாது ஐயநீக்கற் பொருளொடு நிலைபெறும்.
(வ-று.) இம்மரங்களுட்
கருங்காலியாது, எனவரும். (67)
இனைத்தென அறிந்த சினை
முதற் கிளவி
710. இனைத்தென வறிந்த
சினைக்கு முதற்கும்
வினைப்படு தொகுதியி
னும்மை வேண்டும்.
(இ-ள்.) கேட்போரான் இத்துணையென்று
அறியப்பட்ட சினைப்பெயர்க்கும்,
முதற்பெயர்க்கும், வினைப்படுதொகுதிக்கண் உம்மை
கொடுத்தியம்புக.
(வ-று.) ‘பன்னிரு கையும்
பாற்பட வியற்றி’; (திருமுருகா - 118) முரசு முழங்கு
தானைமூவேந்தரும் வந்தார். (68)
இல்லாப் பொருள்
711. இல்லாப் பொருளு மன்ன
வியற்றே.
|