சொல்லதிகாரம் | 199 | முத்துவீரியம் |
(இ-ள்.) வேறுபட்ட
வினையையுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லைப்
பொதுவினையைக் கொடுத்துக் கூறுவது நெறியாகுமென வறிக.
(வ-று.) அடிசில், அணி, இயம்,
படை என்னுந் தொடக்கத்தன. அடிசிலென்பது -
உண்பன,
தின்பன, பருகுவன, நக்குவன வென்னும் நால்வகைக்கும்,
அணியென்பது -
கட்டுவன கவிப்பன, செறிப்பன, பூண்பன வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும்,
படையென்பது
- எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும்,
இயமென்பது - கொட்டுவன,
ஊதுவன, எழுவன வென்னுந் தொடக்கத் தனவற்றிற்கும்
பொதுவாகலின், அடிசிலயின்றார், அணியணிந்தார்,
இயமியம்பினார், படை வழங்கினார். (79)
இதுவுமது
722. எண்ணுழி யும்பொது
வினையா னியலும்.
(இ-ள்.) வேறு
வினைப்பொருள்களைப் பொதுமொழியால் கூறாது
பிரித்தெண்ணுங்காலும் அதனதிலக்கணம் ஒருவினையாற்
கூறாது பொதுவினையால் வரும்.
(வ-று.) சோறுங்
கறியுமயின்றார்; யாழுங்குழலுமியம்பினார். (80)
இரட்டைக் கிளவி
723. 1 இரட்டைக் கிளவி
யிரட்டிற்பிரிந் திசையா.
(இ-ள்.) இரட்டித்து நின்று
பொருளுணர்த்துஞ்சொற்கள் இரட்டித்து நிற்றலிற்
பிரிந்து
நில்லாவாம்.
(வ-று.) மொடு மொடுத்தது; துடி
துடித்தது. (81)
பல்பொருட் சிறப்புப்
பெயர்
724. அஃறிணை யுயர்திணை
யாமிரு மருங்கினும்
ஒருபொரு ளாய்ப்பல பெயர்க்குப் பொதுமொழி
பொதுமைவே றியம்பல்
புலவோர் நெறியே.
(இ-ள்.) அஃறிணைக்கண்ணும்
உயர்திணைக்கண்ணும், ஒருபெயராய்ப் பலபொருட்குப்
பொதுவாகிய சொல்லைப் பொதுமையின் வேறாகக்
கூறுவரென்க.
1. தொல் - சொல் - கிளவி
- 48.
|