சொல்லதிகாரம் | 200 | முத்துவீரியம் |
(வ-று.) பிறரும்
வாழ்வாருளரேனும் பார்ப்பனச் சேரி, உயர் திணை;
பிறபுல்லும்
மரனுமுளவேனும், கமுகந்தோட்டம்:
அஃறிணை. (82)
பொதுப் பிரிபாற் சொல்
725. பெயரினும் வினையினும்
பிரிபவை யெல்லாம்
வழுவில வாமிரு திணைமருங்
கினுமே.
(இ-ள்.)
உயர்திணைக்கண்ணும், அஃறிணைக்கண்ணும்,
பெயரினானும், வினையினானும் பொதுமையிற்பிரிந்து
ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியவாய்
வருவனவெல்லாம் வழுவாகாவாம்.
(வ-று.) தொடியோர் -
கொய்குழையரும்பிய குமரி ஞாழல் - உயர்
திணைக்கட்பெயரிற் பிரிந்த ஆணொழிமிகு சொல்;
வடுகரசராயிரவர் மக்களையுடையர்,
பெயரிற்பிரிந்த பெண்ணொழி மிகுசொல்; இவர்
வாழ்க்கைப்பட்டார், தொழிலிற் பிரிந்த
ஆணொழிமிகுசொல்; நம்பி நூறெருமையுடையன்,
அஃறிணைக்கட்பெயரிற் பிரிந்த ஆணொழிமிகு
சொல்; நம்மரசன் ஆயிரம் யானையுடையன், பெயரிற்
பிரிந்த பெண்ணொழி மிகுசொல்.
(வி-ரை.)
உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஆண் பெண்
இருபாற்குமுரிய பொதுச் சொற்கள், தத்தம் பால்
பொதுமை யினின்றும் நீங்கிச் சிறப்பாக ஒவ்வொரு
பாலுக்கே உரியதாய் வருதலுமுண்டு. இந்நிலை
சிலவற்றிற்குப் பெயரினானும், சிலவற்றிற்கு
வினையினானும் வரும். இதனையே ‘ஒன்றொழி
பொதுச்சொல்’ என நன்னூலாரும் கூறுவர். (தொல் -
சொல் - இளம் - விளக்கவுரை - 50) (83)
திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின
726. திணைவிர வுப்பெயர்
செய்யுண் மருங்கே
அஃறிணை முடிபின வாகு
மென்ப.
(இ-ள்.) திணைவிரவி
எண்ணப்பட்டபெயர் செய்யுட்கண் பெரும்பான்மையும்
அஃறிணைப் பெயரைக்கொண்டு முடியும்.
(வ-று.)
‘வடுக ரருவாளர் வான்கரு
நாடர்
சுடுகாடு பேயெருமை
யென்றிவை யாறுங்
குறுகா ரறிவுடை யார்’.
‘கடுஞ்சினத்த
கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்,
நெடுங்கொடிய நிமிர்தேரு
நெஞ்சுடைய (புகன்) மறவரு மென
நான்குடன் மாண்ட
தாயினும்’ (புறம்-55)
|