சொல்லதிகாரம் | 202 | முத்துவீரியம் |
(வ-று.) மாமரம்வீழ்ந்தது,
விலங்குமாவீழ்ந்தது. (87)
விளங்க வுணர்த்தல்
730. ஒருபொருள் வேறுபா
டுணருங் காலை
விளங்கா தாயின் விளங்க
விளம்புப.
(இ-ள்.) ஒருபொருள்
வேறுபாடறியுங்காலை அஃதாற்றல் முதலியவற்றான்
விளங்காதாயின் அதனை விளங்கக் கூறுவர்
புலவரென்க.
(வ-று.)
அரிதாரச் சாந்தங்
கலந்தது போல
வுருகெழத் தோன்றி
வருமே-முருகுறழும்
அன்பன் மலைபெய்த நீர்
பிறவு மன்ன. (88)
அஃறிணை முடிபிற் குரியன
731. ஆண்மை குடிமை யடிமை
மூப்பே
விருந்தே யிளமை வெண்மை
யுறுப்பே
குழுவே வன்மை குருடே மகவே
அரசே காத லஃறிணை முடிபின.
(இ-ள்.) ஆண்மை முதலாகக்
காதல் ஈறாகக் கூறிய பதினான்கு பெயரும் அஃறிணை
முடிபினவாம்.
(வ-று.) ஆண்மைநன்று,
குடிமைநன்று, அடிமைநன்று, முப்புநன்று, விருந்துநன்று,
இளமைநன்று, வெண்மைநன்று. (89)
இதுவுமது
732. உயிரே கால முலகே
யுடம்பே
தெய்வம் பூதந் திங்கள்
வினையே
ஞாயிறு பிறவு மவற்றோ
ரற்றே.
(இ-ள்.) உயிர்முதலாக
ஞாயிறு இறுதியாகக் கூறிய ஒன்பது பெயரும்,
முற்கூறியவை
போலவே யுயர்திணைப் பெயராயினும்
அஃறிணைமுடிபினவாம்.
(வ-று.) உயிர்போயிற்று,
காலமாயிற்று, உலகம் பசித்தது, உடம்பு நுணுகிற்று,
தெய்வஞ் செய்தது, பூதம்புடைத்தது, திங்களெழுந்தது,
வினைவிளைந்தது, ஞாயிறுபட்டது
எனவரும். (90)
|