சொல்லதிகாரம்204முத்துவீரியம்

(வி-ரை.) ‘தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையெ’ என்ற ஈற்றடியோடு இந்நூற்பா
தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. (93)

அடுக்கு

736. அசைநிலை யிசைநிறை யடுக்கிரு திறத்தன.

(இ-ள்.) அசைநிலையும், இசைநிறையும் என அடுக்கு இரண்டு திறத்தனவாம்.

(வ-று.) மற்றோ மற்றோ, அன்றோ வன்றோ, அசைநிலை; ஏஏஏஏ யம்பன
மொழிந்தனளே, இசைநிறை. (94)

அறுவகைத் தொகைச் சொற்கள்

737. வேற்றுமை வினைபண் புவமை யும்மை
     யன்மொழி யெனத்தொகை யறுவகைப் படுமே. (95)

வேற்றுமைத் தொகை

738. 1 இரண்டு முதலா மிடையா றுருபும்
       வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே.

(இ-ள்.) எழுவாய்க்கும் விளிக்கும் இரண்டு முதல் ஆறுருபுகளுந் தொக்க
தொடர்மொழி வேற்றுமைத் தொகையாம்.

(வ-று.) நிலங்கடந்தான், ஐ; தாய்மூவர், ஓடு; கருப்புவேலி, கு: வரைபாய்தல், இன்;
சாத்தன் புத்தகம், அது; மன்றப்பெண்ணை, கண்; எனவரும். (96)

வினைத் தொகை

739. 2 காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை.

(இ-ள்.) இறப்பெதிர்வு நிகழ்வாகிய முக்காலங்களும் தொக்க பெயரெச்சவினை
வினைத்தொகையாம்.

(வ-று.) கொல்யானை:- கொன்ற யானை, கொல்லும் யானை, கொல்கின்ற யானை.

1. நன் - பொது - 12

2. நன் - பொது - 13