சொல்லதிகாரம் | 204 | முத்துவீரியம் |
(வி-ரை.) ‘தம்வினைக்
கியலும் எழுத்தலங் கடையெ’ என்ற ஈற்றடியோடு
இந்நூற்பா
தொல்காப்பியத்தில் இடம்
பெற்றுள்ளது. (93)
அடுக்கு
736. அசைநிலை யிசைநிறை
யடுக்கிரு திறத்தன.
(இ-ள்.) அசைநிலையும்,
இசைநிறையும் என அடுக்கு இரண்டு திறத்தனவாம்.
(வ-று.) மற்றோ மற்றோ,
அன்றோ வன்றோ, அசைநிலை; ஏஏஏஏ யம்பன
மொழிந்தனளே, இசைநிறை. (94)
அறுவகைத் தொகைச்
சொற்கள்
737. வேற்றுமை வினைபண்
புவமை யும்மை
யன்மொழி யெனத்தொகை யறுவகைப்
படுமே. (95)
வேற்றுமைத் தொகை
738. 1 இரண்டு முதலா மிடையா
றுருபும்
வெளிப்பட லில்லது
வேற்றுமைத் தொகையே.
(இ-ள்.) எழுவாய்க்கும்
விளிக்கும் இரண்டு முதல் ஆறுருபுகளுந் தொக்க
தொடர்மொழி
வேற்றுமைத் தொகையாம்.
(வ-று.) நிலங்கடந்தான், ஐ; தாய்மூவர், ஓடு; கருப்புவேலி, கு:
வரைபாய்தல், இன்;
சாத்தன் புத்தகம், அது; மன்றப்பெண்ணை, கண்;
எனவரும். (96)
வினைத் தொகை
739. 2 காலங் கரந்த
பெயரெச்சம் வினைத்தொகை.
(இ-ள்.) இறப்பெதிர்வு நிகழ்வாகிய
முக்காலங்களும் தொக்க பெயரெச்சவினை
வினைத்தொகையாம்.
(வ-று.) கொல்யானை:-
கொன்ற யானை, கொல்லும் யானை, கொல்கின்ற யானை.
1. நன் - பொது - 12
2. நன் - பொது - 13
|