சொல்லதிகாரம் | 209 | முத்துவீரியம் |
(இ-ள்.)
மேற்கூறிப்போந்த பத்தெச்சங்களும்
தத்தமனெச்சங்களோடு கூடிநடக்கும்.
(வ-று.) தானேகொண்டான் -
பிரிநிலை; உழுதுவந்தான் - வினை யெச்சம்; உண்ட
சாத்தன் - பெயரெச்சம்; கூரியதோர்வாண்மன் -
ஒழியிசையெச்சம்; யானோ கள்வன் -
எதிர்மறை
யெச்சம்; சாத்தனும் வந்தான் - உம்மை யெச்சம்;
ஒல்லென வொலித்தது -
எனவெச்சம்; ‘கற்றதனா லாய
பயனென்கொல்’ (குறள்-2) சொல்லெச்சம், ‘இளைதாக
முண்மரங்கொல்க’ (குறள்-879) குறிப்பெச்சம். (109)
இரப்புரை
752. ஈதா கொடுவிரப்
புரையா கும்மே.
(இ-ள்.) ஈயென்பதும், தாவென்பதும்,
கொடுவென்பதும் ஆகிய மூன்றுசொல்லும்
ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வரும் மொழியாம். (110)
ஈயென் கிளவி
753. அவற்றுள்,
ஈயென் கிளவி யிழிந்தோ
னிரப்புரை.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்,
ஈயென்னுஞ்சொல் இழிந்தவ னிரப்புரையாகும்.
(வ-று.) சோறு ஈ எனவரும். (111)
தாஎன் கிளவி
754. தாவென் கிளவி
சமானன் மேற்றே.
(இ-ள்.) தாவென்னுஞ் சொல்
ஒப்போன் இரப்புரையாம்.
(வ-று.) ஆடைதா - எனவரும்.
(112)
கொடுவென் கிளவி
755. கொடுவென் கிளவி
யுயர்ந்தோன் கூற்றே.
(இ-ள்.) கொடுவென்னுஞ்
சொல் உயர்ந்தோன் இரப்புரையாகும்.
(வ-று.) சாந்துகொடு
எனவரும். (113)
|