சொல்லதிகாரம்209முத்துவீரியம்

(இ-ள்.) மேற்கூறிப்போந்த பத்தெச்சங்களும் தத்தமனெச்சங்களோடு கூடிநடக்கும்.

(வ-று.) தானேகொண்டான் - பிரிநிலை; உழுதுவந்தான் - வினை யெச்சம்; உண்ட
சாத்தன் - பெயரெச்சம்; கூரியதோர்வாண்மன் - ஒழியிசையெச்சம்; யானோ கள்வன் -
எதிர்மறை யெச்சம்; சாத்தனும் வந்தான் - உம்மை யெச்சம்; ஒல்லென வொலித்தது -
எனவெச்சம்; ‘கற்றதனா லாய பயனென்கொல்’ (குறள்-2) சொல்லெச்சம், ‘இளைதாக
முண்மரங்கொல்க’ (குறள்-879) குறிப்பெச்சம். (109)

இரப்புரை

752. ஈதா கொடுவிரப் புரையா கும்மே.

(இ-ள்.) ஈயென்பதும், தாவென்பதும், கொடுவென்பதும் ஆகிய மூன்றுசொல்லும்
ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வரும் மொழியாம். (110)

ஈயென் கிளவி

753. அவற்றுள்,
     ஈயென் கிளவி யிழிந்தோ னிரப்புரை.

(இ-ள்.) முற்கூறியவற்றுள், ஈயென்னுஞ்சொல் இழிந்தவ னிரப்புரையாகும்.

(வ-று.) சோறு ஈ எனவரும். (111)

தாஎன் கிளவி

754. தாவென் கிளவி சமானன் மேற்றே.

(இ-ள்.) தாவென்னுஞ் சொல் ஒப்போன் இரப்புரையாம்.

(வ-று.) ஆடைதா - எனவரும். (112)

கொடுவென் கிளவி

755. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே.

(இ-ள்.) கொடுவென்னுஞ் சொல் உயர்ந்தோன் இரப்புரையாகும்.

(வ-று.) சாந்துகொடு எனவரும். (113)