சொல்லதிகாரம்210முத்துவீரியம்

ஆகுபெயர்

756. ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதை
     அறைகுவ வாகு பெயரா கும்மே.

(இ-ள்.) ஒன்றனது பெயரால் அதற்கியை பிறிதொன்றனைக் கூறல் ஆகுபெயராம்.

(வ-று.) உலகு - உயிர்; தாமரை - தாமரைப்பூ. (114)

757. கேட்குந போலவுங் கிளக்குந போலவும்
      1 இயற்றுந போலவு மியங்குந போலவும்
     அஃறிணை மருங்கினு மறையப் படுமே.

(இ-ள்.) கேளாதனவற்றைக் கேட்பனபோலும், மொழியாதனவற்றை மொழிந்தனபோலும்,
செய்யாதனவற்றைச் செய்தனபோலும், இயங்காதனவற்றை இயங்குவனபோலும்
அஃறிணைக்கண்ணுங் கூறப்படும்.

(வ-று.) ‘நன்னீரை வாழி யனிச்சமே’ (குறள்-1111) ‘பகைமையுங் கேண்மையுங்
கண்ணுரைக்கும்’ (குறள்-709) ‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ (குறள்-293
இவ்வழியெங்கேபோம். (115)

ஒருசார் சொற்களின் வழுவமைதி

758. ஒருதிணைப் பெயரொரு திணைக்காய் வருநவும்
     திசைச்சொல் வாய்பாடு திரிந்து வருநவும்
     இயைபில் லனவியைந் தனவாய் வருநவும்
     திணைமுத லாயின திரிந்து வருநவும்
     அன்றி யனைத்துங் கடப்பா டிலவே.

(இ-ள்.) ஒருதிணைப்பெயர் ஒருதிணைக்காய் வருவன - ஓரெருதை நம்பி - ஒரு
கிளியை நங்கையெனல்.

திசைச்சொல் வாய்பாடு திரிந்துவருவன - புலியான், பூசையானெனல்.

தொன்னெறிக்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவன - ஆற்றுட்செந்த
வெருமையீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்.

1. இயங்குந போலவும் இயற்றுந போலவும் என்பது நன்னூல் (பொது - 58).