பொருளதிகாரம்221முத்துவீரியம்

என்பது, கூதிர்க்காற் றடித்தல்; கொக்கு அன்னம் சங்கு மகிழ்தல்; நீர்தெளிதல்;
மீனினஞ்சனித்தல்; மேகங்கள் சூற்கொளல்; சிறுசண்பகம் பாரிசாதம் மலர்தல்; மானிடர்
வருந்தல் கூதிர்க்காலக்குரியன. (23)

முன்பனிக்குரிய நிகழ்ச்சிகள்

792. கோடை வீசல் கூகையு மாந்தையும்
     மகிழ்தல் செவ்வந்தி மாமர மலர்தல்
     இலந்தை பழுத்த லிக்குநென் முதிர்தன்
     முன்பனிக் குரியவா மொழியுங் காலே.

என்பது, கோடைக்காற் றடித்தல்; கோட்டான் ஆந்தை மகிழ்தல்; செவ்வந்திமரம்
மாமரம் மலர்தல்; இலந்தை பழுத்தல்; கரும்பு நெல் முதிர்தல் முன்பனிக் காலக்குரியன.
(24)

பின்பனிக்குரிய நிகழ்ச்சிகள்

793. வீங்குல வைக்கால் வீசல்கான் கோழி
     புறவ மகிழ்தல் பொங்கருங் கோங்கு
     மலர்தல் பேரீந்து மடற்பனை பழுத்தல்
     பின்பனிக் குரியவாம் பேசுங் காலே.

என்பது, உலவைக்காற் றடித்தல்; காட்டுக்கோழி புறவு மகிழ்தல்; இலவுகோங்கு
மலர்தல்; பேரீந்து பனை பழுத்தல் பின் பனிக்காலக் குரியன. (25)

இளவேனிற்குரிய நிகழ்ச்சிகள்

794. தென்ற லடித்த றேன்குறி லோடே
     அன்றிலு மகிழ்தன் மாங்கனி யுதிர்தல்
     மயின்மகிழ்ந் தாடன் மலர்தல் புனலின்
     தாழை வசந்தந் தனக்குரித் தாகும்.

என்பது, தென்றற்காற் றடித்தல்; வண்டு குயில் அன்றில் மகிழ்தல்; மாங்கனி யுதிர்தல்;
மயில்மகிழ்ந்தாடல்; புன்னை தாழை மலர்தல் இளவேனிற்காலக்குரியன. (26)