எழுத்ததிகாரம் | 24 | முத்துவீரியம் |
(இ-ள்.) ல, ள முன்னர்க் க,
ச, ப, வ, ய க்கள் வந்து மயங்கும்.
(வ-று.) வேல், வாள், கடிது,
சிறிது, பெரிது, வலிது, யாது, வேல்கடிது, வாள்கடிது,
சிறிது, பெரிது எனப் புணர்த்தி நோக்கு. (74)
இதுவுமது
75. வகாரை முன்னர் யகாரை
மயங்கும்.
(இ-ள்.) வகரத்துக்கு
முன்னர் யகரம் வந்து மயங்கும்.
(வ-று.) தெவ்யாது எனவரும்.
(75)
இதுவுமது
76. க, ச, ப, றகாரைமுற்
கலக்கு மென்ப.
(இ-ள்) றகரத்துக்கு
முன்னர்க் க, ச, ப க்கள் வந்து மயங்கும்.
(வ-று) கற்க, பொற்சிலை,
கற்பு. (76)
குற்றொற்றாகாதன
77. ரகார ழகாரங்
குற்றொற் றொற்றா.
(இ-ள்.) ர, ழ க்கள்
குற்றெழுத்தைச் சாராவாம்.
(வ-று.) வேர்பெரிது,
வீழ்சிறிது, வேய்செய்.
(வி-ரை.)
தொல்காப்பியத்தில் இந்நூற்பா ‘அவற்றுள்’
என்ற தனிச்சொல்லுடன்
கூட்டிச்
சொல்லப்பட்டுள்ளது. ஆகா என முடிந்துள்ளது. (எழுத்து -
மொழி - 16) (77)
உடனிலை மெய்ம்மயக்கம்
78. ர, ழ, வல்லன வுடனிலை
யென மொழிப.
(இ-ள்.) ர, ழ
க்களல்லாதனவாகிய பதினாறு மெய்யுந் தம்மொடு தாங்கூடுங்
கூட்டமுடனிலை மெய்மயக்காகும்.
(வ-று.) அக்கம், அச்சம்,
அங்ஙனம், அஞ்ஞானம், அட்டை, அண்ணல், அத்தம்,
அந்நூல், அப்பம், அம்மை, அய்யம், அல்லி, அவ்வை,
அள்ளல், அற்றம், அன்னை. (78)
உயிர்மெய்
மயக்கத்திற்கு அளவில்லை
79. உயிர்மெய் மயக்கிற்
கோரள வின்றே.
|