பொருளதிகாரம் | 243 | முத்துவீரியம் |
காதற்றோழியை நயந்து, இவளவட்குச்
சிறந்த துணையன்றே, அத்துணை எனக்குச்
சிறந்தாளல்லள், எனக்குச் சிறந்தானைக் கண்டு
கூறின், பின்னிவளைச் சென்றெய்தக்
குறையில்லையெனத் தன் காதற்பாங்கனை நினைதல்.
(வ-று.)
பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந்
தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும்பி ரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே.
(திருக். 19)
(கு-ரை.) பூகனை ஆர் புனல் -
பூக்களையுடைய ஒலிபொருந்திய நீர்,
புரிந்து-விரும்பி. யான்
அன்ன பண்பு - என்னை ஒக்கும் பண்பு.
பாங்கன் வினாதல்
என்பது, தன்னை நினைந்து
வாராநின்ற தலைமகனைத் தானெதிர்ப்பட்டு,
அடிமுடிகாறுநோக்கி, நின்னுடைய தோள்கள் மெலிந்து
நீ இவ்வாறாதற்குக்
காரணமென்னோவென்று பாங்கன் முற்பட்டு வினாவல்.
(வ-று.)
சிறைவான்
புனற்றில்லைச் சிற்றம்ப லத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.
(திருக். 20)
(கு-ரை.) தீந்தமிழின் துறை -
அகப்புறத் துறைகள், ஏழிசை - குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. சூழல் -
அவற்றான் இயன்ற பண்ணும்
பாடலும் முதலாயின.
உற்றதுரைத்தல்
என்பது, எதிர்ப்பட்டு வினாவிய
பாங்கனுக்கு, நெருநல் கைலைப்பொழிற்கட்
சென்றேன், அவ்விடத்தொரு சிற்றிடைச் சிறுமான
விழிக்குறத்தியால் இவ்வாறாயினேனெனத்
தனக்குற்றது கூறல்.
(வ-று.)
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
|