பொருளதிகாரம் | 246 | முத்துவீரியம் |
(கு-ரை.) மின்மேல் - மின்னல்போன்ற
இடைமேல். துப்பு - வலிமை. எனது ஆருயிர்
வலிமைபெற நல்வினையும் பயன் தந்திலது என்றான்.
பாங்கனொந்துரைத்தல்
என்பது, விதியொடு வெறுத்து
வருந்தி நிற்பக்கண்ட பாங்கன், அமுதமும்
மழையும்
தங்குணங்கெடினும் நின்குணங்கெடாதநீ, ஒருத்திகாரணமாக
நின் சீலத்தை நினையாதவாறு
இவ்வாறாகியது, எனது தீவினையின் பயனா மித்தனையன்றோவெனத்,
தானுமவனொடு
கூடவருந்தா நிற்றல்.
(வ-று.)
ஆலத்தி னாலமிர் தாக்கிய
கோன்றில்லை யம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக வமிர்தங் குணங்கெடினும்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா தொழிவதென் தீவினையே.
(திருக்-27)
(கு-ரை.) அமிர்தம் குணம்
கெடினும், மழைகாலம் மாறினும் நின்கொடை தப்பாது
எனப்
பாங்கன் கூறுகின்றான். பொற்சீலம் - பொன்
போன்ற மேம்பாடு.
இயலிடங்கேட்டல்
என்பது, தலைமகனோடு கூடவருந்தும்
பாங்கன். நானும் இவனோடு
வருந்தினாலிவனை
ஆற்றுவிப்பாரில்லையென,
அது பற்றுக் கோடாகத்தானாற்றி நின்று,
நின்னாற்
காணப்பட்ட
வடிவுக்கியல் யாது இடம்யாது,
கூறுகவென, அவளுடைய இயலும்
இடமும் கேளாநிற்றல்.
(வ-று.)
நின்னுடை நீர்மையும் நீயுமிவ் வாறு
நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே.
(திருக். 28)
இயலிடங்கூறல்
என்பது, இயலிடங் கேட்ட பாங்கனுக்குத்,
தானவளை எய்தினாற்போலப் பெரியதோர்
ஆற்றுதலை
யுடையனாய், என்னாற்
|