| பொருளதிகாரம் | 248 | முத்துவீரியம் |  
  
 சொன்னவிடமும் இதுவே, இயலும் இவையே,
      இவளுமவளே என்று ஐயமறத்  
 தெளியக் காணா
      நிற்றல். 
      (வ-று.) 
      வடிக்கண் இவைவஞ்சி
      யஞ்சு மிடையிது வாய்பவளம் 
      துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவீடா 
      அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போல் 
      படிச்சந் தமுமிது வேயிவ ளேயப்
      பணிமொழியே.(திருக். 32) 
      (கு-ரை.) அம்பலம்போல் படிச்
      சந்தமும் இதுவே - (தில்லைப் பிரானின்) அம்பலம் 
      போன்ற ஒப்புமையுடைய இடமும் இதுவே. வெற்பன்
      சொற் பரிசே - தலைவன் கூறிய 
      வண்ணம் இருந்தது. 
      தலைவனை வியந்துரைத்தல் 
      என்பது, குறிவழிக்கண்ட பாங்கன்,
      இவ்வுறுப்புகளையுடைய இவளைக் கண்டுபிரிந்து 
      இங்குநின்று
      அங்குவந்து, யான்கழறவும் ஆற்றி, அத்தனையுந் தப்பாமல்
      சொன்ன 
      அண்ணலே
      திண்ணியான் எனத், தலைமகனை
      வியந்துகூறல். 
      (வ-று.) 
      குவளைக் களத்தம் பலவன் குரைகழல்
      போற்கமலத் 
      தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின் 
      இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த 
      கவளக் களிற்றண்ண லேதிண்ணி
      யானிக் கடலிடத்தே. (திருக். 33) 
      (கு-ரை.) குவளைக் களத்து அம்பலவன்
      - நீலமலர் போன்ற மிடற்றையுடைய 
      அம்பலவன்.
      குரைகழல் போல் கமலத் தவளை - ஒலிக்கும்
      கழலையுடைய திருவடிபோலும் 
      தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
      திருமகளனைய தலைவியை. 
      கண்டமைகூறல் 
      என்பது, தலைமகனை வியந்துரைத்த
      பாங்கன், விரைந்து சென்று, தானவளைக் 
      கண்டமை
      தலைமகனுக்குப் பிடிமிசை வைத்துக் கூறாநிற்றல். 
      (வ-று.) 
      பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம்
      பொற்கயிலைப் 
      புணர்ந்தாங் ககன்ற பொருகரி
      யுன்னிப் புனத்தயலே 
			
				
				 |