பொருளதிகாரம்248முத்துவீரியம்

சொன்னவிடமும் இதுவே, இயலும் இவையே, இவளுமவளே என்று ஐயமறத்
தெளியக் காணா நிற்றல்.

(வ-று.)

வடிக்கண் இவைவஞ்சி யஞ்சு மிடையிது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவீடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போல்
படிச்சந் தமுமிது வேயிவ ளேயப் பணிமொழியே.(திருக். 32)

(கு-ரை.) அம்பலம்போல் படிச் சந்தமும் இதுவே - (தில்லைப் பிரானின்) அம்பலம்
போன்ற ஒப்புமையுடைய இடமும் இதுவே. வெற்பன் சொற் பரிசே - தலைவன் கூறிய
வண்ணம் இருந்தது.

தலைவனை வியந்துரைத்தல்

என்பது, குறிவழிக்கண்ட பாங்கன், இவ்வுறுப்புகளையுடைய இவளைக் கண்டுபிரிந்து
இங்குநின்று அங்குவந்து, யான்கழறவும் ஆற்றி, அத்தனையுந் தப்பாமல் சொன்ன
அண்ணலே திண்ணியான் எனத், தலைமகனை வியந்துகூறல்.

(வ-று.)

குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே. (திருக். 33)

(கு-ரை.) குவளைக் களத்து அம்பலவன் - நீலமலர் போன்ற மிடற்றையுடைய
அம்பலவன். குரைகழல் போல் கமலத் தவளை - ஒலிக்கும் கழலையுடைய திருவடிபோலும்
தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருமகளனைய தலைவியை.

கண்டமைகூறல்

என்பது, தலைமகனை வியந்துரைத்த பாங்கன், விரைந்து சென்று, தானவளைக்
கண்டமை தலைமகனுக்குப் பிடிமிசை வைத்துக் கூறாநிற்றல்.

(வ-று.)

பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே