எழுத்ததிகாரம்25முத்துவீரியம்

(இ-ள்.) உயிர்மெய் மயங்கும் மயக்கத்திற்கு வரையறை யில்லையாம். (79)

செய்யுட்கண்வரும் ஈரொற்றுக்கள்

80. 1ல, ள, மெய்திரிந்த ன, ண, முன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே.

(இ-ள்.) ல, ள க்கள் திரிந்த ன ண க்களுக்கு முன்னின்ற மகரந் தன்மாத்திரையிற்
குறுகி இரண்டொற்றாக மயங்கும்.

(வ-று.) போன்ம், மருண்ம். (80)

முதல் இடை கடைகளில் வரும் எழுத்துக்கள்
தம் பெயர் மொழியின் மயங்கும்

81. 2தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
    இம்முறை மாறியு மியலு மென்ப.

(இ-ள்.) தம்பெய ருரைக்குங்கால் மொழிக்கு முதலிலு மிடையிலுமிம் முறையை
மாறியு நடக்கும்.

(வ-று.) ‘ல, ள மெய்திரிந்த.’ (80) (81)

மொழிக்கு ஈறாகும் உயிரெழுத்துக்கள்

82. ஈராறா றுயிரு மிறுதியா மெனவே.

(இ-ள்.) பன்னிரண்டுயிரும் மொழிக்கீறாகும்.

(வ-று.) விள, பவா, கிளி, குரீ, கடு, மரூ, சே, தை, நொ, கோ, வௌ. (82)

குறில் அளபெடைக்கண் ஈறாகும்

83. அளபிற் குற்றுயி ரந்த மாகும்.

(இ-ள்.) முற்கூறியவற்றுள் குற்றுயிரைந்தும் அளபெடுப்புழி ஈறாகும்.

(வ-று.) ஆ அ, ஈ இ, ஊ உ, ஏ எ, ஓ ஒ. (83)

1. நன் - எழுத்து 65.

2. ,, ,, 66.