| எழுத்ததிகாரம் | 28 | முத்துவீரியம் |  
  
குற்றியலுகரமும்
மொழிக்கு ஈறாகும் 
92. எஞ்சிய வுகரமு மிறுதி
யாகும். 
(இ-ள்.) குற்றியலுகரமு
மீறாகும். 
(வ-று.) நாகு. (92) 
உயிர்மெய் நிற்கும் முறை 
93. ஒற்றுமுன் னுயிர்பின்
னுறுமுயிர் மெய்யே. 
(இ-ள்.) உயிர்மெய்,
ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாக வரும். 
(வி-ரை.) 
‘‘மெய்யின் வழியது
உயிர்தோன்று நிலையே’’ (நூன் - 98) 
எனத் தொல்காப்பியரும், 
‘‘ஒற்று முன்னாய் வரும்
உயிர்மெய்’’ (எழுத் - 34) 
என நன்னூலாரும் கூறுதல்
காண்க. (93) 
உயிர்,
மெய்யோடியையினும் தந்நிலை திரியாது 
94. மெய்யொடு மேவினும்
வேறு படாவுயிர் 
(இ-ள்.) உயிர் மெய்களோடு
கூடினும் வேறுபடாவாம். 
(வ-று.) கோ, பூ, தீ, பா, கௌ. 
(வி-ரை.)
மெய்யெழுத்துக்கள் தாம் கூடிய உயிரின் மாத்திரையே
தமக்குரிய 
மாத்திரையாகக் கொள்ளும் என்பது இதன் கருத்தாகும். 
‘‘மெய்யோ டியையினும்
உயிரியல் திரியா’’ (நூன் - 10) 
என்பது தொல்காப்பியம்.
(94) 
மெய்கள் அகரத்தோடு
கூடிவரும் 
95. மெய்யி னியக்க
மகரமொடு சிவணும் 
(இ-ள்.) மெய் பதினெட்டும்
அகரவுயிரோடியலும். 
(வ-று.) க, ங, ச, ஞ, ட, ண, த, ந,
ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன. (95) 
			
				
				 |