யாப்பதிகாரம்418முத்துவீரியம்

இரட்டைத் தொடை

892. ஓரடி முழுது மொருசொல் லேவரத்
     தொடுப்ப திரட்டைத் தொடையெனப் படுமே.

என்பது, ஓரடிமுழுவதும் ஒருசொல்லே வருவது இரட்டைத் தொடையாகும்.

(வ-று.)

ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
விளக்கினுட் சீறெரி யொக்குமே யொக்குங்
குளக்கொட்டிப் பூவி னிறம். (31)

செந்தொடை

893. செந்தொடை யொவ்வாத் திறத்தன வாகும்.

என்பது, மோனைமுதலியன பிறவும் ஒவ்வாது வருவது செந்தொடையாகும்.

(வ-று.)

பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாட
னன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே. (32)

இணைத்தொடை

894. இணையிரு சீர்மிசை யெய்துவ தாகும்.

என்பது, முதலிரு சீரக்கண்ணு மோனை முதலியவைந்தும் வருவது இணைத்
தொடையாகும்.

(வ-று.)

அணிமல ரசோகின் தளிர்நலங் கவற்றி

இணைமோனை

மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே

இணையியைபு

பொன்னின் அன்ன பொறிசுணங் கேந்தி

இணையெதுகை