யாப்பதிகாரம் | 428 | முத்துவீரியம் |
என்பது, அச்செப்பலோசை
ஏந்திசைச் செப்பலெனவும், தூங்கிசைச் செப்பலெனவும்,
ஒழுகிசைச் செப்பலெனவும் மூன்று
வகைப்படும். (13)
ஏந்திசைச் செப்பல்
914. வெண்சீர் வெண்டளை யான்வரும்
பாவே
ஏந்திசைச் செப்ப லென்மனார்
புலவர்.
என்பது, வெண்சீர் வெண்டளையான்
வருஞ்செய்யுள் ஏந்திசைச்
செப்பலோசையாகும்.
(வ-று.)
யாதானு நாடாமா லூராமாலென்
னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
(குறள்-397) (14)
தூங்கிசைச் செப்பல்
915. இயற்சீர் வெண்டளை யான்வரும்
பாவே
தூங்கிசை யாமெனச் சொல்லப்
படுமே.
என்பது, இயற்சீர் வெண்டளையான்
வருஞ்செய்யுள் தூங்கிசைச்
செப்பலோசையாகும்.
(வ-று.)
பாலொடு தேன்கலந் தற்றே
பனிமொழி
வாலெயி றூறிய நீர். (15)
ஒழுகிசைச் செப்பல்
916. வெண்சீ ரியற்சீர்
விரவி
யொழுகுவ
தொழுகிசை யென்மனா ருணர்ந்திசி
னோரே.
என்பது, வெண்சீர் வெண்டளையும்
இயற்சீர் வெண்டளையும் விரவிவருஞ் செய்யுள்
ஒழுகிசைச் செப்பலோசையாகும்.
(வ-று.)
கற்றதனா லாய பயனென்கொல்
வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின். (குறள்-2) (16)
|