யாப்பதிகாரம்433முத்துவீரியம்

என்பது, மூன்றடி முதலாகப் பலவடிகளானும் முடிந்தெல்லா வடிகளையும்
முதலிடை கடையாக வைத்துக் கூறினு மதனோசையும் பொருளுங் கெடாது வருவது
அடிமறி மண்டிலவகவற்பாவாகும்.

(வ-று.)

தீர்த்த மென்பது சிவகங் கையே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே
ஏத்த ருந்தல மெழிற் புலியூரே. (சிதம்பரச் செய்யுட்கோவை) (26)

ஆசிரியத் தாழிசை

927. மூன்றடி யொத்து வருவது மொருபொருள்
     மேல்மூன் றடுக்கி வருவது மகவற்
     றாழிசை யாமெனச் சாற்றப் படுமே.

என்பது, மூன்றடியாக மூன்றடியுமொத்து வருவதும் ஒரு பொருள்மேன்
மூன்றடுக்கி வருவதும் அகவற்றாழிசை யாகும்.

(வ-று.)

வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணநின் னிறைகழ றொழுதனம்.

தனி.

கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்றுநம் மானுள்வருமே லவன் வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி.

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயி
லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி.

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லிநம் மானுள் வருமே லவன் வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி. 

(சிலம்பு-ஆய்ச்சியர் குரவை, 1, 2, 3) (27)

ஆசிரியத் துறை

928. அளவடி யாயீற் றயலடி குறைநவும்
     ஈற்றய லடிகுறைந் திடைமடக் காக