யாப்பதிகாரம்461முத்துவீரியம்

எழுத்தானந்தம்

1006. ஆனந்த மைவகை யறையுங் காலை
      எழுத்தி னிலைபிறழ்ந் தனவெழுத் தானந்தம்.

என்பது, எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம்,
அணியானந்தமாம். அவற்றுள், எழுத்துநிலை பிறழ்ந்தன எழுத்தானந்தம்.

(வ-று.)

ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாந்
தோழி துணையாய்த் துயர்தீரும்-வாழி
நறுமாலைத் தாராய் திரையவோஒ வென்னுஞ்
செறுமாலை சென்றடைந்த போது.

இதனுள் திரையன் திரையஓ ஓஎன அளபெடை எழுத்தானந்தம். (45)

சொல்லானந்தம்

1007. சொல்லா னந்தஞ் சொன்னிலை பிறழ்ந்தன.

என்பது, சொன்னிலை பிறழ்ந்து வருவன சொல்லானந்தம்.

(வ-று.)

என்னிற் பொலிந்த திவண்முகமென் றெண்ணியே
தன்னிற் குறைபடுப்பான் றண்மதிய-மின்னி
விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசயன்
எரிந்திலங்கு வேலி னெழும்.

இதனுள் விசயனெரிந்து எனச் சொல்லானந்தம். (46)

பொருளானந்தம்

1008. பொருணிலை பிறழ்வன பொருளா னந்தம்.

என்பது, பொருள்நிலை பிறழ்ந்து வருவன பொருளானந்தம்.

(வ-று.)

வலிக்குமாம் மாண்டார் மனம், எனப் பொருளானந்தம். (47)

யாப்பானந்தம்

1009. யாப்பினிலை பிறழ்வன யாப்பா னந்தம்.