யாப்பதிகாரம்468முத்துவீரியம்

பெண்பாலெழுத்தும், ஆண்பாற்கு ஆண்பாலெழுத்தும், ஆம், இருமையும் மயங்கிப் புணரிற்
குற்றமாம். (70)

அமுத வெழுத்தும் நஞ்செழுத்தும்

1032. அ இ உ எ க ச த ந பமவவும்
      அமுதெழுத் தியாயோ ராரோ லாலோ
      அவற்றி னொற்று மளபெடை மக்குறள்
      ஆய்தமு நஞ்செழுத் தாமுத லாம்பின்
      ஆகா வென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, அ, இ, உ, எ ஆகிய நான்குயிரும், க, ச, த, ந, ப, ம, வ ஆகிய ஏழு
மெய்யும், அமுத வெழுத்தாம். யா, யோ, ரா, ரோ, லா, லோ இவ்வாறு மெய்யும், 
ய, ர, ல ஆகிய மூன்று மெய்யும், உயிரளபெடையும், ஒற்றளபெடையும், மகரக்குறுக்கமும்,
ஆய்தமும் நஞ்செழுத்தாம். இவற்றுள் முற்கூறிய அமுத வெழுத்து நன்மையாகும்.
பிற்கூறிய நஞ்செழுத்தாகாவாம். (71)

எழுத்துக்களுக்குரிய வருணம்

1033. வருமுயி ரடங்கலும் வல்லினப் புள்ளியும்
     அந்தணர்க் காந்தந யரபமப் புள்ளி
     மன்னவர்க் காம்லவ றனவணி கர்க்காம்
     பின்னவர்க் காம்ழளப் பேசுங் காலே.

என்பது, பன்னிரண்டுயிரும், வல்லெழுத்தாறும், பார்ப்பாருக் காகும். த, ந, ய, 
ர, ப, ம இவ்வாறு மெய்யும், அரசருக்காகும். ல, வ, ற, ன இந்நான்கு மெய்யும்
வணிகருக்காகும். ழ, ள, இவ்விரண்டு மெய்யும் சூத்திரருக்காகும். (72)

எழுத்துக்களுக்குரிய நாட் பெயர்கள்

1034. ஆவிநான் கைந்தொடு நான்குமாய்ப் பிரிவது
      கார்த்திகை பூராடமுத்திராட மாமெய்யிற்
      ககரநான் கிரண்டு மூன்று மூன்றிவை
      ஓணமா திரையிரு பூசமா முறையே
      சகரநான் கைந்துமூன் றிரேபதி யச்சுவினி
      பரணிஞ ஞாஞே ஞொவவிட்ட மேனைய
      தகர மிரண்டெழு தான்கடை மூன்று