எழுத்ததிகாரம்51முத்துவீரியம்

(வ-று.) விளவிற்கு, கோஒற்கு, அதற்கு, ஒருபாற்கு.

(வி-ரை.)

‘‘னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு’’ (தொல் - புணரி - 21)

என்பது தொல்காப்பியம். (18)

அத்துச் சாரியை

178. அத்துறி னகரவீ றழியு மென்ப.

(இ-ள்.) அத்துச்சாரியை அகர வீற்றுச்சொன் முன் இல்லையாகும்.

(வ-று.) மகத்தை எனவரும்.

(வி-ரை.)

‘‘அத்தின் அகரம் அகரமுனை யில்லை’’ (தொல்-புணரி-23)

என்பது தொல்காப்பியம். (19)

இக்குச் சாரியை

179. இக்குறி னிகர விறுதியு மற்றே.

(இ-ள்.) இக்குச்சாரியை இகரம் இகரவீற்றுச்சொன் முன்னில்லையாம்.

(வ-று.) ஆடிக்குக்கொண்டான்.

(வி-ரை.) ஆடி + கொண்டான் என்பது இக்குப் பெற்று ஆடிக்குக் கொண்டான்
எனவரும். ஆடித்திங்களில் கொண்டான் என்பது பொருள்.

‘‘இக்கின் இகரம் இகரமுனை யற்றே’’ (தொல்-புணரி-உச)

என்பது தொல்காப்பியம். (20)

இதுவுமது

180. ஐகான் முன்னரு மவ்விய னிலையும்.

(இ-ள்.) இக்குச்சாரியை இகரம் ஐகாரவீற்றுச்சொன் முன்னுமில்லையாம்.

(வ-று.) சித்திரைக்குக்கொண்டான்.