அணியதிகாரம்517முத்துவீரியம்

சேலே பணியப் புலியுயர்த்த செம்பியர்கோன்
வேலே விழிக்கு நிகர். (தண்டி-மேற்) (11)

அநியமவுவமை

1165. நியமித்த வுவமையை நீக்கிப் பிறிதொரு
     பொருளொடு புணருவ தநியம மாகும்.

என்பது, நியமித்தவுவமையை விலக்கி வேறொரு பொருளொடு புணருவது
அநியமவுவமை.

(வ-று.)

கௌவை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டின்
மௌவல் கமழுங் குழன்மடவாய்-செவ்வி
மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி
அதுபோல்வ துண்டெனினு மாம். (தண்டி-மேற்) (12)

ஐயவுவமை

1166. ஐயுற் றிருமையு மறைகுவ தைய
      உவமை யென்மனா ருணர்ந்திசி னோரே.

என்பது, உவமானப் பொருளையும் உவமேயப் பொருளையும் ஐயமுற்றுக் கூறுவது
ஐயவுவமை.

(வ-று.)

தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல்
மாதர் விழியுலவு வாண்முகங்கொல்-யாதென்
றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி
ஒருபாற் படாதென் னுளம். (தண்டி-மேற்) (13)

தேற்றவுவமை

1167. ஐயுற் றதனை யறிந்து துணிவது
     தேற்ற மென்மனார் தெளிந்திசி னோரே.

என்பது, ஐயுற்றபொருளைத் தெளிந்து துணிவது தேற்றவுவமை.

(வ-று.)

தாமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியுங்
காமர் மதியுங் கறைவிரைவும்-ஆமிதனாற்