அணியதிகாரம் | 518 | முத்துவீரியம் |
பொன்னை மயக்கும் பொறிசுணங்கி
னார்முகமே
என்னை மயக்கு மிது. (தண்டி-மேற்) (14)
விபரீதவுவமை
1168. புகலரு முவமையைப் பொருள
தாக்கிப்
பொருளை யுவமைப் பொருள தாக்கி
உரைப்பது விபரீத வுவமை யாகும்.
என்பது, உவமையைப்
பொருளாக்கிப் பொருளை யுவமையாக்கிக் கூறல்,
விபரீதவுவமை.
(வ-று.)
திருமுகம் போன்மலருஞ் செய்ய
கமலங்
கருநெடுங்கண் போலுங் கயல்க-ளரிவை
இயல்போலு மஞ்ஞை யிடைபோலுங் கொம்பர்
மயல்போலும் யாம்போம் வழி.
(தண்டி-மேற்) (15)
வேட்கையுவமை
1169. பொருளை யின்னது போலுமென்
றறைய
வேட்கின்ற தென்னுள மென்பது
வேட்கை.
என்பது, பொருளையின்னது
போலக்கூற, எனது மனம் இச்சிக்கின்ற தெனல்
வேட்கையுவமை.
(வ-று.)
நன்றுதீ தென்றுணரா வென்னுடைய
நன்னெஞ்சம்
பொன்றதைந்த பொற்சுணங்கிற்
பூங்கொடியே - மன்றன்
மடுத்ததைந்த தாமரைநின்
வாண்முகத்துக் கொப்பென்
றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று.
(தண்டி-மேற்) (16)
பலபொருளுவமை
1170. ஒருபொருட் குப்பல வுவமமுறல்
பலபொருள்
உவமை யென்மனா ருணர்ந்திசி
னோரே.
என்பது, ஒருபொருளுக்குப பலவுவமை
வரல் பலபொருளுவமை.
|