| எழுத்ததிகாரம் | 52 | முத்துவீரியம் |  
  
(வி-ரை.) சித்திரை
என்னும் ஐகார ஈறு இக்குப் பெற சித்திரை இக்கு என
ஆகும். 
இந்நூற்பா விதியால் இகரம் கெட்டு
சித்திரைக்கு என முடியும். 
‘‘ஐயின் முன்னரும்
அவ்வியல் நிலையும்’’ (தொல் - புணரி - 25) 
என்பது தொல்காப்பியம்.
(21) 
இதுவுமது 
181. அக்கிறுகெடும்வலி
யடையுங் காலே. 
(இ-ள்.) வல்லெழுத்து வரிற்
கடைநின்ற அக்குச்சாரியை கெடும். 
(வ-று.) குன்று + அக்கு + கூகை =
குன்றக்கூகை. 
(வி-ரை.) அக்கிறு
கெடும்-அக்குச் சாரியையின் இறுதியான (கு) கெடும் என்பது 
கருத்து. 
‘‘எப்பெயர் முன்னரும்
வல்லெழுத்து வருவழி 
அக்கின் இறுதிமெய் மிசையொடுங் கெடுமே 
குற்றிய லுகரம் முற்றத்
தோன்றாது’’ (தொல் - புணரி - (26) 
எனவரும்
தொல்காப்பியமும் காண்க. (22) 
இன் சாரியை வாராத இடம் 
182. இன்னின் றைந்தாம்
வேற்றுமை யியலும். 
(இ-ள்.) ஐந்தாம்வேற்றுமை
யின்சாரியையின்றி நடக்கும். 
(வ-று.) பலாவின்கோடு. 
(வி-ரை.) 
‘‘இன்னென வரூஉம்
வேற்றுமை யுருபிற்கு 
இன்னென் சாரியை இன்மை
வேண்டும்’’ (தொல் - புணரி - (29) 
என்பர்
தொல்காப்பியரும். (23) 
உடம்படுமெய் 
183. இ, ஈ, ஐவழி யவ்வு மேனை 
     உயிர்வழி வவ்வு மேமுன்னிவ் விருமையும் 
     உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.1 
1. நன் - எழுத்து - உயிரீற். 
			
				
				 |