எழுத்ததிகாரம் | 52 | முத்துவீரியம் |
(வி-ரை.) சித்திரை
என்னும் ஐகார ஈறு இக்குப் பெற சித்திரை இக்கு என
ஆகும்.
இந்நூற்பா விதியால் இகரம் கெட்டு
சித்திரைக்கு என முடியும்.
‘‘ஐயின் முன்னரும்
அவ்வியல் நிலையும்’’ (தொல் - புணரி - 25)
என்பது தொல்காப்பியம்.
(21)
இதுவுமது
181. அக்கிறுகெடும்வலி
யடையுங் காலே.
(இ-ள்.) வல்லெழுத்து வரிற்
கடைநின்ற அக்குச்சாரியை கெடும்.
(வ-று.) குன்று + அக்கு + கூகை =
குன்றக்கூகை.
(வி-ரை.) அக்கிறு
கெடும்-அக்குச் சாரியையின் இறுதியான (கு) கெடும் என்பது
கருத்து.
‘‘எப்பெயர் முன்னரும்
வல்லெழுத்து வருவழி
அக்கின் இறுதிமெய் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகரம் முற்றத்
தோன்றாது’’ (தொல் - புணரி - (26)
எனவரும்
தொல்காப்பியமும் காண்க. (22)
இன் சாரியை வாராத இடம்
182. இன்னின் றைந்தாம்
வேற்றுமை யியலும்.
(இ-ள்.) ஐந்தாம்வேற்றுமை
யின்சாரியையின்றி நடக்கும்.
(வ-று.) பலாவின்கோடு.
(வி-ரை.)
‘‘இன்னென வரூஉம்
வேற்றுமை யுருபிற்கு
இன்னென் சாரியை இன்மை
வேண்டும்’’ (தொல் - புணரி - (29)
என்பர்
தொல்காப்பியரும். (23)
உடம்படுமெய்
183. இ, ஈ, ஐவழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுன்னிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.1
1. நன் - எழுத்து - உயிரீற்.
|