அணியதிகாரம்520முத்துவீரியம்

என்பது, கூடாதவொரு பொருளைக் கூடுவதாகக்கொண்டு, அதனை யொன்றற்குவமை
யாக்கிக் கூறல் கூடாவுவமை.

(வ-று.)

சந்தனத்திற் செந்தழலுந் தண்மதியில் வெவ்விடமும்
வந்தனவே போலுமா னும்மாற்றம்-பைந்தொடியீர்
வாவிக் கமல மலர்முகங்கண் டேக்கறுவார்
ஆவிக் கிவையோ வரண். (தண்டி-மேற்) (20)

பொதுநீங்குவமை

1174. உவமையைக் கூறி யொதுக்கிப் பொருளை
      உவமை யாக்கி யுரைப்பது பொதுநீங்
      குவமை யென்மனா ருணர்ந்திசி னோரே.

என்பது, உவமையைச் சொல்லிநீக்கிப் பொருளையுவமையாக்கிக் கூறல்
பொதுநீங்குவமை.

(வ-று.)

திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்
விரைமலர்க்கு மேலாந் தகையாற்-கருநெடுங்கண்
மானே யிருளளகஞ் சூழ்ந்தநின் வாண்முகந்
தானே யுவமை தனக்கு. (தண்டி-மேற்) (21)

உருவக அணி

1175. உவமைப் பொருளுவ மேயப் பொருளையும்
     வேறுபா டொழித்தொன் றெனும்பொருள் விளங்க
     உரைப்ப துருவக மாமுரை தரினே.

என்பது, உவமைப் பொருளையும் உவமேயப் பொருளையும் வேறுபாடு நீக்கி
யொன்றெனும் பொருள் விளங்கக்கூறல் உருவகவணி.

(வ-று.)

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார். (22)

தொகை யுருவகம்

1176. தொகுத்து ரைப்பது தொகையெனப் படுமே.