அணியதிகாரம் | 542 | முத்துவீரியம் |
பாயுங்கொ லென்று பனிமதியம்
போல்வதூஉந்
தேயுந் தெளிவிசும்பி னின்று. (தண்டி-மேற்) (83)
ஏதுவணி
1237. ஓதுமே தேனு மொருபொருட்
டிறத்தால்
ஈது விளைந்ததென் றியம்புவ
தேது.
என்பது, யாதேனு மொருபொருளின்
திறத்தினால் ஈதுண்டானதென்று கூறல் ஏது.
(வ-று.)
எல்லைநீர் வையகத் தெண்ணிறந்த
வெவ்வுயிர்க்குஞ்
சொல்லரிய பேரின்பந் தோன்றியதான்-முல்லைசேர்
தாதலைத்து வண்கொன்றைத்
தாரலைத்து வண்டார்ப்பப்
பூதலத்து வீழ்ந்த புயல்.
(தண்டி-மேற்) (84)
நுட்பவணி
1238. அறிந்துவே றாயறை யாது
குறிப்பினுங்
தொழிலினு மரிதுணர் தொழிற்றிற
னுட்பம்
ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.
என்பது, தெரிந்து கொண்டு
வேறுபடக் கூறாமல், குறிப்பினானாதல்,
வினையினானாதல் அரிதாக நோக்கியறியும் வினைத்
தன்மையையுடையது நுட்பம்.
(வ-று.)
குறிப்பு.
காதலன் மெல்லுயிர்க்குக் காவல்
புரிந்ததாற்
பேதைய ராயம் பிரியாத-மாதர்
படரிருள்கால் சீய்க்கும்
பகலோனை நோக்கிக்
குடதிசையை நோக்குங் குறிப்பு.
(தண்டி-மேற்)
தொழில்.
பாடல் பயிலும் பணிமொழி
தண்பணைத்தோள்
கூடல வாவிற் குறிப்புணர்த்து- மாடவர்க்கு
மென்றீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்றீங் குறிஞ்சி யிசை.
(தண்டி-மேற்) (85)
|