அணியதிகாரம் | 543 | முத்துவீரியம் |
இலேசவணி
1239. தான்கரு தியவெளிப் படுக்குஞ்
சத்துவம்
வேறொன் றாலே விளைந்தன வாக
மறைத்துக் கூறுவ திலேச மாகும்.
என்பது, தான் கருதியது
வெளிப்படுக்கும் சத்துவங்களை வேறொன்றால்
நடந்ததாக
மறைத்துக் கூறல் இலேசவணி.
(வ-று.)
கல்லுயர்தோட் கிள்ளி
பரிதொழுது கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று-சொல்லுவராற்
பொங்கும் படைபரப்பி மீதெழுந்த பூந்துகள்சேர்ந்
தெங்கண் கலுழ்ந்தனவா லென்று, (தண்டி-மேற்) (86)
இதுவுமது
1240. ஒன்றனைப் பழித்தும் புகழ்ந்து
முரைப்பது
மற்றதன் பாற்படும் வழுத்துங்
காலே.
என்பது, ஒன்றைப் பழித்தும்
புகழ்ந்துங் கூறலும் அவ்விலேசமாம்.
(வ-று.)
பழிப்பு.
ஆடன் மயிலியலி யன்ப
னணியாகங்
கூடுங்கான் மெல்லென் குறியறியா-னூடல்
இளிவந்த செய்கை யிரவாளன் யாண்டும்
விளிவந்த வேட்கை யிலன்.
(தண்டி-மேற்)
புகழ்.
மேய கலவி விளைபொழுது
மெல்லென்னுஞ்
சாய றளராமற் றாங்குமாற்-சேயிழையாய்
போர்வேட்ட மேன்மைப் புகழாளன்
யான்விரும்பும்
தார்வேட்ட தோள்விடலை தான். (தண்டி-மேற்) (87)
சுவையணி
1241. புந்தியி னிகழ்திறன்
புறத்துப் புலனாய்
விளங்க லெண்வகை மெய்ப்பாட்
டானும்
ஒழுகல் சுவையென வுரைக்கப் படுமே.
|