அணியதிகாரம் | 546 | முத்துவீரியம் |
(வ-று.)
மின்னிகரா மாதே விரைச்சாந்
துடன்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்கீழ் நின்றருணீ-தன்னிகராம்
செந்தீ வரமலருஞ் செங்காந்தட் போதுடனே
இந்தீ வரங்கொணர்வல் யான்.
(தண்டி-மேற்) (91)
உதாத்தவணி
1245. ஆக்கத் துயர்வு மகத்தின
துயர்வு
மிகுதி யாக விளம்புவ துதாத்தம்.
என்பது,
செல்வத்துயர்ச்சியையும்,
உள்ளத்துயர்ச்சியையும் மிகுத்துக் கூறல்
உதாத்தவணி.
(வ-று.)
செல்வமிகுதி:
கன்றும் வயவேந்தர் செல்வம்
பலகவர்ந்தும்
என்றும் வறியோ ரினங்கவர்ந்து-மொன்றும்
அறிவரிதாய் நிற்கு மளவினதா லம்ம
செறிகதிர்வேற் சென்னி திரு.
(தண்டி-மேற்)
உள்ளமிகுதி:
மண்ணகன்று தன்கிளையி னீங்கி
வனம்புகுந்து
பண்ணுந் தவத்தியைந்து பார்த்தன்றா-னெண்ணிறந்த
மீதண்டர் கோன்குலையும்
வெவ்வசுரர் வேரறுத்தான்
கோதண்ட மேதுணையாக் கொண்டு.
(தண்டி-மேற்) (92)
அவநுதியணி
1246. கோதறு சிறப்பினுங்
குணத்தினும் பொருளினும்
உண்மையை விலக்கிவே றொன்றா
யறைகுவ
தவநுதி யென்மனா ரறிந்திசி
னோரே.
என்பது, சிறப்பினும்,
குணத்தினும், பொருளினும் உண்மையை மறுத்துப்
பிறிதொன்றாகக்கூறல் அவநுதியணி.
(வ-று.)
சிறப்பு:
நறைகமழ்தார் வேட்டார்
நலனணியு நாணு
நிறையு நிறைதளரா நீர்மை-யறநெறிசூழ்
செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெவ்வடுபோர்
வெங்கோப மால்யானை வேந்து.
(தண்டி-மேற்)
|