1272. எழுத்துநான் கடியுமொத்
தியல்வது சமதை.
என்பது,
நான்கடியுமெழுத்துக்களொத்துவரல் சமதைச்
செய்யுள்.
பொருட்டெளிவு
1273. பொருளா லறிவது பொருட்டெ
ளிவாகும்.
என்பது, பொருளாலறிதல்
பொருட்டெளிவுச்செய்யுள்.
(வ-று.)
காம முழந்து வருந்தினார்க்
கேம
மடலல்ல தில்லை வலி. (குறள்-1131) (16)
இன்பம்
1274. மொழிதரு முற்றிய
மோனையைப் பெறுவன
வின்ப மென்மனா ரியல்புணர்ந்
தோரே.
என்பது, முற்றுமோனையைப் பெறல்
இன்பச் செய்யுள்.
(வ-று.)
துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. (குறள்-15) (17)
உதாரம்
1275. உதாரமீ கையைப்புகழ்ந்
துரைப்பதா மெனலே.
என்பது, கொடையைப்புகழ்ந்து
கூறல் உதாரச்செய்யுள்.
(வ-று.)
இலனென்னு மெவ்வ முரையாமை
யீதல்
குலனுடையான் கண்ணே யுள. (குறள்-223) (18)