அணியதிகாரம்556முத்துவீரியம்

புலம்

1276. பொருள்புலப் படல்புல னாமென மொழிப.

என்பது, பொருள் வெளிப்படத் தோன்றல் புலச்செய்யுள்.

(வ-று.)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று. (குறள்-108) (19)

சுகுமாரதை

1277. வண்கண மொழிதர வருஞ்சுகு மாரதை.

என்பது, வல்லெழுத்துக்களின்றி வரல் சுகுமாரதைச் செய்யுள்.

(வ-று.)

யானை யால்யா னையைமே வுவரான்
வினையால் வினைமையு மாம். (20)

காந்தி

1278. பொருட்பொலி வாற்புகழ்ந் துரைப்பது காந்தி.

என்பது, பொருண்மிகுதியால் புகழ்ந்துரைத்தல் காந்திச் செய்யுள்.

(வ-று.)

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு. (குறள்-1103) (21)

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

1279. எழுவாய் நதிப்புன லெனப்பய னிலையொடு
      முடிவன வாற்றுநீ ராமென மொழிப.

என்பது, அடிமுதலாற்று நீரைப்போல இறுதியோடு முடிவன ஆற்று
நீர்ப்பொருள்கோட் செய்யுள்.

(வ-று.)

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போன்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறீஇத் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. (சீவகசிந்தாமணி) (22)