எழுத்ததிகாரம் | 57 | முத்துவீரியம் |
மென்கணம் இடைக்கண
முயிர்க்கணமாகிய நாற்கணமும் வரினியல்பாம்.
(வ-று.) நம்பிபெரியன்,
நம்பிநல்லன், நம்பிவலியன், நம்பியவன் அவன்
சிறியன்,
அவனல்லன், அவன்வலியன்,, அவனரியன். (34)
எய்தியதன்மேற்
சிறப்புவிதி
194. அவற்றுள்
இ, ஐ யிறுதிமுன் வன்கண
மிகுமே.
(இ-ள்.) மேற்கூறிப்
போந்தவற்றுள், இ, ஐ இறுதி முன் வன்கணம்வரின்
மிக்குமுடியும்.
(வ-று.) செட்டிக்கூத்தன்,
நங்கைப்பெண். (35)
பொதுப்பெயர்முன்
நாற்கணம்
195. இருமைக் கும்பொது
வியல்பா தலுமுள.
(இ-ள்.) அஃறிணைக்கும்
உயர்திணைக்கும் பொதுவாகிய பொதுத்திணை
யியல்பாதலுமுள.
(வ-று.) சாத்தன் பெரியன், சாத்தனல்லன்,
சாத்தன்வலியன், சாத்தனரியன்,
சாத்திபெரியள், சாத்திநல்லள், சாத்திவலியள்,
சாத்தியரியள் எனவரும்.
(வி-ரை.)
‘‘அஃறிணை
விரவுப்பெயர் இயல்பு மாருளவே’’ (தொகை - 13)
என்பர்
தொல்காப்பியர். (36)
வினை முதற்பொருளான்
வரும் தொழிற்சொல்
196. இனமாந் தொழிற்பெய
ரெய்தின் வேற்றுமை
வழியியல் பாதலு முறழ்தலு
மாகும்.
(இ-ள்.) வேற்றுமைக்கண்,
மெய்யையுமுயிரையும் ஈறாகிய மொழிக்குமுன்,
மூன்றாவதற்குரிய வினைமுதற்பொருளான் உளவாகிய
தொழிற்சொற்கள்வரி னியல்பாதலும்
உறழ்தலுமாம்.
(வ-று.)
பேய்கோட்பட்டான் = பேய்க்கோட்பட்டான்.
புலிகடிக் கப்பட்டான் =
புலிக்கடிக்கப்பட்டான்.
(வி-ரை.) பேய் புலி
என்னும் மெய், உயிரீற்றுச் சொற்கள் வினைமுதற்பொருளாக
வந்தன. அவற்றான் ஆகிய
தொழில்கள் முறையே
|