எழுத்ததிகாரம் | 62 | முத்துவீரியம் |
இதுவுமது
211. யாகார வினாவு
மவற்றோ ரற்றே.
(இ-ள்.) வினாப்பெயரைத்
தராநின்ற யாவும் அற்றுச்சாரியை பெறுமென்க.
(வ-று.) யாவற்றை. (52)
அன் சாரியைபெறும்
சொற்கள்
212. உவ்விறு சுட்டன்
னொடுவரு மென்ப.
(இ-ள்.) சுட்டு முதலாகிய
உகரவீற்றுச்சொற்கள் அன்சாரியை பெறும்.
(வ-று.) அதனை, இதனை, உதனை.
(53)
நீ யென்னும் பெயர்
213. நீயெனு மொருபெயர்
நின்னெனத் திரியும்.
(இ-ள்.) நீயென்னு முன்னிலை
யொருமைப்பெயர் நின்னெனத் திரியுமெனவறிக.
(வ-று.) நின்னை. (54)
ஒன் சாரியைபெறும் ஈறு
214. ஓகார விறுதிக்
கொன்னே சாரியை.1
(இ-ள்.) ஓகார விறுதிப்பெய
ரொன்சாரியை பெறுமென்க.
(வ-று.) கோஒனை, கோஒனால்,
கோஒற்று. (55)
அத்துச்சாரியை பெறும்
மரப் பெயர்கள்
215. அ, ஆ விறுமர மத்தொடு சிவணும்
ஏழ னுருபுவந் தியையுங்
காலே.
(இ-ள்.) மரப்பெயரை
யுணர்த்தும் அ, ஆ வீற்று மொழிகள் ஏழாம் வேற்றுமை
வந்தியையுங்கால் அத்துச்சாரியை பெறும்.
1. தொல் - எழுத்து -
உருபியல் - 8.
|