எழுத்ததிகாரம்63முத்துவீரியம்

(வ-று.) விளவத்துக்கண், பலாவத்துக்கண். (56)

இன்சாரியை பெறும் ஈறுகள்

216. ஞநவிறு மொழியின் னொடுநடை பெறுமே.

(இ-ள்.) ஞநக்களை இறுதியாகிய மொழிகள் இன்சாரியை பெறுமென்க.

(வ-று) உரிஞினை, பொருநினை. (57)

அற்றுச்சாரியை பெறும் சொற்கள்

217. சுட்டுமுதல் வகர மற்றொடு சிவணும்.

(இ-ள்.) அவ், இவ், உவ் என்னுஞ் சுட்டெழுத்தை முதலாக வுடைய வகரவீற்றுச்
சொற்கள் அற்றுச்சாரியைபெறும்.

(வ-று.) அவற்றை, இவற்றை, உவற்றை. அவ் + அற்று + ஐ = அவற்றை எனவரும்.

(வி-ரை.)

‘‘வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே’’ (உருபு - 11)

என்பது நன்னூல். (58)

தெவ் என்னும் சொல் இன் பெறுதல்

218. ஏனைய வகரக் கின்னே சாரியை.

(இ-ள்.) இவை யொழிந்த தெவ் வென்னுஞ்சொல் இன்சாரியை பெறும்.

(வ-று.) தெவ்வினை.

(வி-ரை.)

‘‘ஏனை வகரம் இன்னொடு சிவணும்’’ (உருபு - 12)

என்பது தொல்காப்பியம். (59)

மகர இறுதி அத்துப் பெறுதல்

219. மஃகான் புள்ளிமுன் னத்தே சாரியை1.

1. தொல் - எழுத் - உருபு - 13.