எழுத்ததிகாரம்65முத்துவீரியம்

எல்லாம் எனும் பெயர்

224. அற்றெல் லாம்பெறு மாயிடை யும்மை
     இறுதியொடு சிவணு மென்மனார் புலவர்.

(இ-ள்.) எல்லாமென்னும் பொதுப்பெயர் அற்றுச்சாரி பெறும், சாரியையீற்றில் உம்மை
நிலைபெறும்.

(வ-று.) எல்லாவற்றையும் என வரும். (65)

உயர்திணையில் எல்லாம் எனும் பெயர்

225. உயர்திணை யாயி னம்மிடை தோன்றும்.

(இ-ள்.) எல்லாமென்னும் பொதுச்சொல் உயர்திணையாயின், நம்முச்சாரியை பெற்றுக் கடையில் உம்மை நிலைபெறுமென வறிக.

(வ-று.) எல்லா நம்மையும்.

(வி-ரை.)

‘‘உயர்திணை யாயின் நம்மிடை வருமே’’ (உருபு - 18)

என்பது தொல்காப்பியம். (66)

எல்லாரும் எல்லீரும் என்னும் பெயர்கள்

226. எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
     தள்ளி நிரலே தம்நும் சாரப்
     புல்லு முருபின் பின்ன ரும்மே1.

(இ-ள்.) எல்லாருமென்னும் படர்க்கைப்பெயரும் எல்லீரு மென்னும்
முன்னிலைப்பெயருமாகிய இரண்டு பெயர்களும் ஈற்றி னும்மையை நீக்கி, முறையே தம்மும்
நும்மும் பொருந்த வுருபின் பின் உம்மைவரும்.

(வ-று.) எல்லார் தம்மையும், எல்லீர் நும்மையு மெனவரும். (67)

தான், யான் எனும் பெயர்கள்

227. தான்முதல் குறுகும் யானென் னாகும்.

(இ-ள்.) தானென்னுந் தன்மை யொருமைப்பெயர் நெடுமுதல் குறுகும், யானென்னுந்
தன்மையொருமைப்பெயர் என் எனத் திரியும்.

1. நன் - எழுத்து - உருபு . 8.