எழுத்ததிகாரம் | 67 | முத்துவீரியம் |
(வ-று.) ஒன்று + பத்து + ஐ =
ஒருபானை, இருபானை, முப்பானை, நாற்பானை,
ஐம்பானை,
அறுபானை, பிறவுமன்ன. (71)
ஒன்பதின் முன்னும்
ஆன்வருதல்
231. ஒன்பது மானொடு
மொத்து நடக்கும்.
(இ-ள்.) ஒன்பதென்னு
மெண்ணுப்பெயரும் ஆனைப் பெறும்.
(வ-று.) ஒன்பது + ஐ =
ஒன்பானை. (72)
சுட்டுமுதலாகிய
ஆய்தப்பெயரும் யாதென்பெயரும்
232. ஆய்தச் சுட்டும் யாது மன்பெறும்
ஆவயி னாய்த மழியுஞ்
சுட்டே.
(இ-ள்.) சுட்டுமுதலாகிய
வாய்தவீறும், யாதெனவருங் குற்றிய லுகரவீறும்
அன்சாரியைபெறும். ஆயிடைச் சுட்டு ஆய்தங்கெடும்.
(வ-று.) அஃது + ஐ = அதனை,
இதனை, உதனை, யாதனை, (73)
திசைப்பெயர்முன் ஏழனுருபு
வருதல்
233. திசைப்பெயர் முன்வரு மேழ னுருபிற்
கின்னென் சாரியை
யின்றியு மியலும்
(இ-ள்.) திசைப்பெயர்க்கு
முன்வரும் ஏழாம் வேற்றுமையுருபிற்கு
இன்சாரியை
யின்றியும் வரும்.
(வ-று.) வடக்கின்கண்,
வடக்குக்கண் எனவரும். (74)
1. அகர ஈறு
அகரச்சுட்டு
முதலியவற்றின் முன் வல்லினம் வருதல்
234. அகரச் சுட்டு மாங்கவு முவமையும்
எனவென் னெச்சமு மிருவழி
யினுமிகும்.
(இ-ள்.) அல்வழி
வேற்றுமையினும், அகரச்சுட்டும், ஆங்க
என்னுமுரையசைக்கிளவியும், உவமையுருபும், எனவென்னும்
வினை யெச்சமும், க, ச, த,
பக்கள் வரின்
மிக்குமுடியும்.
|