எழுத்ததிகாரம்68முத்துவீரியம்

(வ-று.) அக்கொற்றன், ஆங்கக்கொண்டான், புலிபோலக் கொண்டான்,
கொள்ளெனக்கொண்டான். (75)

வினையெச்சம் மிக்கு முடிதல்

235. வினையெஞ்சு கிளவியு மிகுவென மொழிப.

(இ-ள்.) வினையெச்சமொழிகளும் மிக்குமுடியும்.

(வ-று.) கூவப்போயினான்; செய்யப்போனான் எனவரும்.

(வி-ரை.)

‘‘வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே’’ (தொல் - உயிர்மயங் - 2)

என்ற நூற்பாவில் 234, 235 ஆகிய இரு நூற்பாக்களின் கருத்துக்கள் அடங்கி நிற்றல் காண்க.
(76)

அகரச்சுட்டின் முன் மென்கணம் வருதல்

236. அகரச் சுட்டின்முன் ஞ, ந, மத் தோன்றிற்
     றத்தமொற் றிடைமிகு மென்மனார் புலவர்.

(இ-ள்.) அகரச்சுட்டின் முன் ஞ, ந, மக்கள் வரின், தத்த மெய்களிடையின்
மிக்குமுடியுமெனவறிக.

(வ-று.) அ + ஞாண் = அஞ்ஞாண்; அந்நூல்; அம்மணி எனவரும்.

(வி-ரை.)

‘‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்’’ (தொல் - உயிர்மயங் - 3)

என்பது தொல்காப்பியம். (77)

அகரச்சுட்டின் முன் இடைக்கணம் வருதல்

237. வயவரின் வகரம் வருமென மொழிப.

(இ-ள்.) அகரச்சுட்டின்முன், வ, யக்கள் வரின், வகர வொற்று இடையில் வரும்.