எழுத்ததிகாரம் | 69 | முத்துவீரியம் |
(வ-று.) அ + வளை = அவ்வளை, அ
+ யாழ் = அவ்யாழ்.
(வி-ரை.)
‘‘யவமுன் வரினே வகரம்
ஒற்றும்’’ (உயிர் மயங்கியல் - 4)
என்பது தொல்காப்பியம்.
(78)
அகரச்சுட்டின் முன்
உயிர்க்கணம் வருதல்
238. ஆவி வரினு மவ்விய
னிலையும்.
(இ-ள்.) அகரச்சுட்டின் முன்
உயிர்வரினும், வகரவொற்று இடையில் வரும்.
(வ-று.) அ + அடை = அவ்வடை;
பிறவுமன்ன.
(வி-ரை.)
‘‘உயிர்முன் வரினும்
ஆயியல் திரியாது’’ (உயிர்மயங்கியல் - 5)
என்பது தொல்காப்பியம்.
(79)
செய்யுட்கண் அகரம் ஆகார
மாதல்
239. யாப்பினுள் அ, ஆ வாகு
மென்ப.
(இ-ள்.) செய்யுளில் அகரம்
ஆகாரமாகும்.
(வ-று.) அ + இடை = ஆயிடை
எனவரும்.
(வி-ரை.)
‘‘நீட வருதல் செய்யுளுள்
உரித்தே’’ (உயிர்மயங்கியல் - 6)
என்பது தொல்காப்பியம்.
(80)
சாவ என்பதில் இறுதி
உயிர்மெய் கெடுதல்
240. சாவவென் மொழியீற்
றுயிர்மெய்சா தலும்விதி1.
(இ-ள்.) சாவவென்னும்
வினையெச்சச் சொல்லினதிறுதி மெய் கெடுதலுமாம்.
(வ-று.)
சாவக்குத்தினான்=சாக்குத்தினான். (81)
1. நன் - எழுத் - உயிரீற்று
- 19.
|