எழுத்ததிகாரம்72முத்துவீரியம்

(இ-ள்.) உம்மை தொக்குநின்ற விருபெயர்த் தொகைச் சொற்கு அகரச்சாரியை
யுரித்தாகும்.

(வ-று.) இராஅப் பகல்.

(வி-ரை.)

‘‘உம்மை யெஞ்சிய இருபெயர்த் தொகைச்சொல்
மெய்ம்மை யாக அகரம் மிகுமே’’ (உயிர்மக - 21)

என்ற தொல்காப்பியத்தைத் தழுவியது இந் நூற்பா வாகும். (89)

ஆகார ஈற்றுச் சொற்கள்

249. ஆவு மாவு மழைப்பும் வினாவு
     மியாவும் பலவு மிகாதியல் பாகும்.

(இ-ள்.) ஆவென்னும் பசுப்பெயரும், மாவென்னும் பல பொருளொரு சொல்லும்,
விளிப்பெயரும், வினாப்பெயரும், மியாவென்னு முன்னிலையுரையசைக்கிளவியும்,
பலவையுணர்த்தும் பலவுமிகாதியல்பாகும்.

(வ-று.) ஆகுறிது, மாகுறிது, ஊராகொள், கேண்மியா கொற்றா, உண்ணா குதிரைகள்
எனவரும்.

(வி-ரை.) பலவும் என்பது அஃறிணைப் பன்மைப் பொருளை யுணர்த்தும் ஆகார ஈற்று
முற்றுவினைச் சொல்லைக் குறிக்கும். (90)

இதுவுமது

250. ஓரெழுத்து மொழியுங் குறிற்கீ ழாவும்
     அகரச் சாரியை பெறுமென மொழிப.

(இ-ள்.) ஓரெழுத் தொருமொழியும், ஒற்றெழுத்தின் முன்னின்ற ஆவும் அகரச்சாரியை
பெறும்.

(வ-று.) கா அக்கோடு, பலா அக்கோடு எனவரும்.

(வி-ரை.)

‘‘குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி’’ (உயிர்ம - 24)

என்பது தொல்காப்பியம். (91)