எழுத்ததிகாரம் | 76 | முத்துவீரியம் |
(இ-ள்.) நாழியென்னு
முகத்தலளவைப் பெயருக்கு முன் பதக்கென்னு
முகத்தலளவைப் பெயர் வரின், நாழியீற்றுயிர் மெய்கெட
வல்லொற்றாகிய டகரமெய்
தோன்றும்.
(வ-று.) நாழி + உரி = நாடுரி
எனவரும்.
(வி-ரை.)
‘‘உரிவரு காலை நாழிக்
கிளவி
இறுதி இகர மெய்யொடுங் கெடுமே
டகார ஒற்றும் ஆவயி னான’’
(உயிர்ம - 438)
என்பது தொல்காப்பியம்.
(103)
பனி என்னும் பெயர்
263. இன்னு மத்தும்
பனியொடு சிவணும்.
(இ-ள்.) பனியென்னுங்
காலப்பெயர் இன்சாரியையும் அத்துச்சாரியையும்
பெறுமென்க.
(வ-று.)
பனியிற்கொண்டான். பனியத்துக்கொண்டான், (104)
வளி என்னும் பெயர்
264. வளிப்பெயர்க்
கிளவியு மவற்றோ ரற்றே.
(இ-ள்.) வளியென்னும் பூதப்பெயர்க்கிளவியும்
இன்சாரியையும் அத்துச்சாரியையும்
பெறுமெனவறிக.
(வ-று.)
வளியிற்கொண்டான், வளியத்துக்கொண்டான். (105)
உதிமரக்கிளவி
265. உதியெனு மரமெலி
மிகுமென மொழிப.
(இ-ள்.) உதியென்னு
மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிக்கு முடியும்.
(வ-று.) உதி + கோடு =
உதிங்கோடு. (106)
புளிமரக்கிளவி
266. அம்முச் சாரியை யடையு
மரப்புளி.
(இ-ள்.) புளியென்னும்
மரப்பெயர்க்கிளவி யம்முச்சாரியை பெறுமென்க.
|