எழுத்ததிகாரம்77முத்துவீரியம்

(வ-று.) புளி + கோடு = புளியங்கோடு. (107)

சுவைப்புளி

267. சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும்.1

(இ-ள்.) சுவையையுணர்த்தும் புளியென்னும் பெயர் முன் றமக்கினமாகிய
மெல்லெழுத்துந் தோன்றுமென்க.

(வ-று.) புளிக்கறி = புளிங்கறி எனவரும். (108)

நாள்முன் வரும் தொழிற்பெயர்

268. தொழிற்பெயர் வரின்நாள் ஆனொடு சிவணும்.

(இ-ள்.) நாளென்னுஞ்சொற்கு முன்றொழிற்பெயர்வரின் ஆன்சாரியை பெறும்.

(வ-று.) பரணியாற்கொண்டான். (109)

4. ஈகார ஈறு

இடக்கர்ப்பெயரும் முன்னிலைப்பெயரும்

269. ஈகார பகரமு நீயு மியல்பே.

(இ-ள்.) ஈகாரபகரமாகிய இடக்கர்ப்பெயரும், நீயென்னு முன்னிலையொருமைப்பெயரு
மிகாதியல்பாம்.

(வ-று.) பீகுறிது, நீகுறியை. (110)

இடக்கர்ப்பெயர் இன்னது என்பது

270. ஈகார பகர மிடக்கராய் வழங்கும்.

(இ-ள்.) ஈகார பகரமென்பது பீ யென்னுந் தகாத மொழியாம் (111)

மீயெனும் இடப்பெயர்

271. மீயியல் பாதலு மெலிவலி மிகுதலும்
     ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

1. நன் - எழுத்து - உயிரீற் - 25.