எழுத்ததிகாரம் | 82 | முத்துவீரியம் |
(வ-று.) ஆவிரங்காய்,
பனங்காய். (129)
பனைமுன் கொடி வருதல்
289. பனைமுன் கொடிவரின்
மிகுமென மொழிப.
(இ-ள்.) பனையென்னு மரப்பெயர்க்குமுன்,
கொடியென்னுஞ் சொல்வரின்
மிக்குமுடியும்.
(வ-று.) பனைக்கொடி. (130)
பனைமுன் அட்டு வருதல்
290. அட்டு வரினா வாகு
மென்ப.
(இ-ள்.) பனையென்னும்
பெயருக்குமுன் அட்டென்னுஞ் சொல்வரின் ஆகாரமாகத்
திரியும்.
(வ-று.) பனாட்டு. (131)
மழை யென்னும் பெயர்
291. இன்னொடு
மழையெதிர்ந் தியலு மென்ப.
(இ-ள்.) மழையென்னுங்
கார்காலப்பெயர் இன்சாரியை பெறும்.
(வ-று.)
மழையிற்கொண்டான்.
(வி-ரை.) மழையென்னுஞ்
சொல் அத்துச் சாரியையும் பெறும் என்பர்
தொல்காப்பியர். (உயிர் - 85) (132)
9. ஓகார ஈறு
ஐயப் பொருளில் வரும்
ஓகாரம்
292. ஐயவோ வினாவலி
மிகாதியல் பாகும்.
(இ-ள்.)
ஐயப்பொருண்மையையுடைய ஓகாரவினா மிகாது
இயல்பாகுமென்க.
(வ-று.) யானோகொண்டேன்.
(133)
வேட்கைமுன் அவா வருதல்
293. அவாவரின் வேட்கையீ
றாவியு மெய்யும்
அழிந்து டகரமெய்
ணகரவொற் றாகும்.
|