எழுத்ததிகாரம் | 87 | முத்துவீரியம் |
(இ-ள்.)
மகரமெய்யிறுதியாகிய மொழிகள் வேற்றுமைக்கண்
மிகுதலும் ஈறு
கெடுதலுமாமெனவறிக.
(வ-று.) மரக்கோடு, மரநூல்,
மரவேர். (152)
இதுவுமது
312. அ, ஆ வரினீற் றயனீ
ளலுமாம்.
(இ-ள்.) அகர ஆகாரங்கள்
வரின் ஈற்றயல் நீளலுமா மென்க.
(வ-று.) மரம் + அடி = மராடி,
குளம் + ஆம்பல் = குளாம்பல்.
(வி-ரை.)
‘அகர ஆகாரம் வரூஉங்
காலை
ஈற்றுமிசை அகரம் நீடலு
முரித்தே’ (புள்ளி - 16)
என்பது தொல்காப்பியம்.
(153)
மெல்லெழுத்துறழ்தல்
313. மெல்லின முறழ்சில
மொழிகளு முளவே.
(இ-ள்.) மெல்லெழுத்து
உறழ்ந்து முடியுஞ்சொற்களும் சிலவுளவாம்.
(வ-று.) குளம் + கரை +
குளங்கரை, குளக்கரை. (154)
இல்லாம் என்னும்
மரப்பெயர்
314. இல்லா மரமெனின்
மெல்லெழுத்து மிகுமே.
(இ-ள்.) இல்லாம் என்னுஞ்
சொல் மரப்பெயராயின் மெல்லெழுத்து மிக்குமுடியும்.
(வ-று.) இல்லாங்கோடு.
(வி-ரை.) இல்ல மரப்பெயர்
என ஓதுவர் தொல்காப்பியர்.
(155)
மரம்
315. வேற்றுமை யல்வழி
மெல்லெழுத் தாகும்.
(இ-ள்.) வேற்றுமையல்லாத
அல்வழிக்கண் மெல்லெழுத் தாகுமென்க.
|