எழுத்ததிகாரம்89முத்துவீரியம்

(இ-ள்.) ஈமும், கம்மும், உருமும் உகரச்சாரியை பெறுமென்க.

(வ-று.) ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது. (161)

(வி-ரை.) ஈம் - சுடுகாடு. கம் - தொழில். உரும் - இடி.

மேலனவற்றிற்குச் சிறப்புவிதி

321. அவற்றுள்,
     ஈம், கம் அக்கையு மேற்கு மென்ப.

(இ-ள்.) முற்கூறியவற்றுள், ஈமும், கம்மும் அக்குச்சாரியையும் பெறும்.

(வ-று.) ஈமக்குடம், கம்மக்குடம். (162)

நாட்பெயர்

322. அத்து மானு நாளொடு சிவணும்.

(இ-ள்.) நாளென்னுஞ்சொல், அத்துச்சாரியையும் ஆன்சாரியையும் பெறும்.

(வ-று) மகத்தாற்கொண்டான். (163)

5. னகர ஈறு

323. னகரம்வேற் றுமைக்கண் றகர மாகும்.

(இ-ள்.) வேற்றுமைக்கண், னகரமெய் க, ச, த, பக்கள் வரின் றகரவொற்றாகத் திரியும்.

(வ-று.) பொற்குடம். (164)

மன், சின், ஆன், ஈன்

324. மன்னுஞ் சின்னு மானு மீனும்
     அன்ன வியல்பின வாமென மொழிப.

(இ-ள்.) மன், சின், ஆன், ஈன் ஆகிய நான்குபெயரும் முற்கூறியவாறே றகரமாகத்
திரியுமென்க.

(வ-று.) அதுமற்கொண்கன் தேரே, காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை (அகம்-எ)
ஆற்கொண்டான், ஈற்கொண்டான் எனவரும்.