| எழுத்ததிகாரம் | 93 | முத்துவீரியம் |
(இ-ள்.) ஆதனென்னும்
பெயரும், பூதனென்னும் பெயரும், பொதுப் பெயரைப்போல
நிலைமொழியிறுதியும் வருமொழி
முதலுங் கெட்டு அவற்றோடிடை நின்ற தகரவொற்றும்
உயிருங் கெடும்.
(வ-று.) ஆதன் + தந்தை =
ஆந்தை; பூதன் + தந்தை = பூந்தை. (176)
இயற்பெயரும் சிறப்புப்
பெயரும்
336. அவ்வியற் பெயர்சிறப் படுக்குங் காலை
இவ்விரு விதிகளு மேலா தம்முறும்.
(இ-ள்.) அவ்வியற்பெயர்
சிறப்புப் பெயரோடு புணருங்கால் இவ்விரண்டு விதிகளையும்
பெறாது அம்முச்சாரியை பெறும்.
(வ-று.) கொற்று + கொற்றன்
= கொற்றங்கொற்றன். (177)
அழன்
337. அழனிறு கெடவலி
யாயிடை மிகுமே.
(இ-ள்.) அழனென்னும்
பெயரிறுதிகெட வல்லெழுத்து மிகும்.
(வ-று.) அழன் + குடம் =
அழக்குடம்.
(வி-ரை.) அழக்குடம் -
பிணக்குடம். (178)
கோன், பேன், தான்
338. கோனும் பேனுந் தானு
மியல்பே.
(இ-ள்.) கோனென்னும்
பெயரும் பேனென்னும் பெயரும் தானென்னும் பெயரு
மிகாதியல்பாம்.
(வ-று.) கோன்றந்தை,
பேன்றந்தை, தான்றந்தை. (179)
தான், யான்
339. தான்முதல் குறுகலும் யானென் னாகலும்
ஆகு மல்வழி யல்லாக்
காலை.
(இ-ள்.) தானென்னும்
படர்க்கை யொருமைப் பெயர் நெடுமுதல் குறுகலும்,
யானென்னுந் தன்மை யொருமைப் பெயரென்னாகத்
திரிதலுமாமெனவறிக.
|