எழுத்ததிகாரம்93முத்துவீரியம்

(இ-ள்.) ஆதனென்னும் பெயரும், பூதனென்னும் பெயரும், பொதுப் பெயரைப்போல
நிலைமொழியிறுதியும் வருமொழி முதலுங் கெட்டு அவற்றோடிடை நின்ற தகரவொற்றும்
உயிருங் கெடும்.

(வ-று.) ஆதன் + தந்தை = ஆந்தை; பூதன் + தந்தை = பூந்தை. (176)

இயற்பெயரும் சிறப்புப் பெயரும்

336. அவ்வியற் பெயர்சிறப் படுக்குங் காலை
     இவ்விரு விதிகளு மேலா தம்முறும்.

(இ-ள்.) அவ்வியற்பெயர் சிறப்புப் பெயரோடு புணருங்கால் இவ்விரண்டு விதிகளையும்
பெறாது அம்முச்சாரியை பெறும்.

(வ-று.) கொற்று + கொற்றன் = கொற்றங்கொற்றன். (177)

அழன்

337. அழனிறு கெடவலி யாயிடை மிகுமே.

(இ-ள்.) அழனென்னும் பெயரிறுதிகெட வல்லெழுத்து மிகும்.

(வ-று.) அழன் + குடம் = அழக்குடம்.

(வி-ரை.) அழக்குடம் - பிணக்குடம். (178)

கோன், பேன், தான்

338. கோனும் பேனுந் தானு மியல்பே.

(இ-ள்.) கோனென்னும் பெயரும் பேனென்னும் பெயரும் தானென்னும் பெயரு
மிகாதியல்பாம்.

(வ-று.) கோன்றந்தை, பேன்றந்தை, தான்றந்தை. (179)

தான், யான்

339. தான்முதல் குறுகலும் யானென் னாகலும்
     ஆகு மல்வழி யல்லாக் காலை.

(இ-ள்.) தானென்னும் படர்க்கை யொருமைப் பெயர் நெடுமுதல் குறுகலும்,
யானென்னுந் தன்மை யொருமைப் பெயரென்னாகத் திரிதலுமாமெனவறிக.