எழுத்ததிகாரம்95முத்துவீரியம்

தாய்

344. இயல்பாந் தாய்வேற் றுமைவழி யென்ப.

(இ-ள்.) வேற்றுமைக்கண் தாயென்னு முறைப்பெயர் மிகாது இயல்பாகுமென்க.

(வ-று.) தாய்கை.

(வி-ரை.)

‘‘தாயென் கிளவி இயற்கை யாகும்’ (புள்ளி - 63)

என்பது தொல்காப்பியம். (185)

மகன்முன் தாய் வருதல்

345. மிகுமகன் றாய்ப்பினர் மேவுங் காலை.

(இ-ள்.) தாயென்னு மொழிக்குப்பின் மகனென்னுஞ் சொல்வரின் மிக்குமுடியும்.

(வ-று.) மகன்றாய்க்கலாம்.

(வி-ரை.)

‘மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே’ (புள்ளி - 64)

என்பது தொல்காப்பியம். (186)

யகரத்தின்முன் மெல்லினம் உறழ்தல்

346. மெல்லினம் உறழ்தரும் மொழிகளு முளவே.

(இ-ள்.) மெல்லெழுத்துக்கள் உறழ்ந்து முடியுஞ் சொற்களு முளவாமென்க.

(வ-று.) வேய்க்குறை - வேய்ங்குறை. (187)

வெதிர் முதலிய மரப்பெயர்கள்

347. வெதிரார் பீர்சார் மெல்லெழுத்து மிகுமே.

(இ-ள்.) வெதிரும், ஆரும், பீரும், சாரும் மெல்லெழுத்து மிக்குமுடியும்.

(வ-று.) வெதிர்ங்கோடு, ஆர்ங்கோடு, பீர்ங்கோடு, சார்ங்கோடு எனவரும்.