எழுத்ததிகாரம்96முத்துவீரியம்

(வி-ரை.)

‘‘ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்’’ (புள்ளி - 68)

என்பது தொல்காப்பியம். (188)

பீர்

348. அவற்றுள்,
     பீரங் கிளவி யம்மொடுஞ் சிவணும்.

(இ-ள்.) மேற்கூறியவற்றுள் பீரென்னுஞ் சொல் அம்முச் சாரியையும் பெறும்.

(வ-று.) பீரங்கோடு.

(வி-ரை.)

‘பீரென் கிளவி அம்மொடு சிவணும்’ (புள்ளி - 71)

என்பது தொல்காப்பியம். (189)

சார்

349. காழ்வரிற் சார்மிகுங் கருதுங் காலே.

(இ-ள்.) சாரென்னுஞ்சொல் காழென்னுஞ் சொல்லொடு புணரின் மிக்குமுடியும்.

(வ-று.) சார்க்காழ்.

(வி-ரை.)

‘சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்‘ (புள்ளி - 69)

என்பது தொல்காப்பியம்.

சார்க்காழ் - சார் மரத்தினது விதை. (190)

எ. லகர ஈறு

350. லகாரம்வேற் றுமைக்கண் றகர மாகும்.

(இ-ள்.) வேற்றுமைக்கண், லகரமெய் றகரவொற்றாகத் திரியுமென்க.

(வ-று.) கல் + குறிது = கற்குறிது. (191)