பக்கம் எண் :

360மாறனலங்காரம்

241. கொடைநலன்விதந்துரைப்பதுகொடைமிகுதி.

(எ-ன்) கொடைமிகுதியுணர்-ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.

படைக்கெதிர்நிற்பவரின்றாகுநேமிபரித்தபிரான்
கொடைக்கெதிர்நிற்குங்கொடையுளதோமறைகூறுமுண்மைத்
தொடைக்கெதிர்நிற்பக்கவிசொன்னமாறற்குச்சொன்னசொன்ன
நடைக்கெதிர்நிற்பவுபயவிபூதியுநல்கினனே.
(568)

இது கொடைமிகுதி. இதனுள், மறைகூறுமுண்மைத்தொடைக் கெதிர்நிற்பவென்றது பரத்துவத்தையும், ஆவியினையும், பூதத்தையும் உபநிடதங்கோத் தடைவேசொன்ன வுண்மைவாக்கியத்திற் கொப்ப வென்றவாறு. சொன்னசொன்னநடைக்கெதிர்நிற்ப வென்றது சொன்னலத்தி னொழுகலாற்றிற்கும், பொருணலத்தி னொழுகலாற்றிற்கும் பொருந்த வென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.

(156)

242. காந்தியைமிகுத்துரைப்பதுவேகாந்தி.

(எ-ன்) காந்திமிகுதி யுணர்--ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.

வேணுக்குழலிசைத்தவேங்கடமாலைப்புலவீ
ராணுத்தமனென்பதாரறியார்--நாண்மலருட்
பெண்ணுத்தமியிறையும்பேர்கிலாள்பேரழகைக்
கண்ணுற்றவன்மார்பகம்.
(569)

இது காந்திமிகுதி. முன்னையது பாடாண்சார்ந்தபுறத்திணையிற் கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல். பின்னையது கடவுள்வாழ்த்து. ஆணுத்தமன் - புருடோத்தமன். பெண்ணுத்தமி - பெரியபிராட்டி. இறையும்பேர்கிலாள் - நீங்கிற்பிறளொருத்தி குடிபுகுவளென்பது கருத்து.

(157)

243. காமர்கற்புரைப்பதுகற்பின்மிகுதி.

(எ-ன்) கற்புமிகுதி யுணர்--ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.