பக்கம் எண் :

(பொருளணியியலுரை)361

பொற்பிற்குரியபுகழ்ச்சானகிபுனிதக்
கற்பிற்கிணையுளதோகாணுங்காற்--சிற்றிளவ
லிட்டதழற்றண்ணென்றெதிர்சுமந்ததன்றதனைச்
சுட்டதவள்கற்பாஞ்சுடர்.
(570)

இது கற்புமிகுதி. துறை - வாகைசார்ந்தகற்புவென்றி.

(158)

244. நயம்புணர்ஞானவீரியமமர்வீரமென்
றியம்பியவிறலுமோரிரண்டென்ப.

(எ-ன்) இது விறன்மிகுதிப்பகுதியுணர்--ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.

தருஞாலமேற்றந்தமாலருட்பாலன்றித்தாய்முலைப்பா
லொருநாளினுமருந்தாவரம்பேணியுணர்வழியப்
பொருமாயையையடங்கப்பொருதேபுறங்கண்டவொண்மைத்
திருஞானவீரியத்தான்மகிழ்மாறனென்சிந்தையனே.
(571)

இது ஞானவீரியமிகுதி.

(இ-ள்) கற்பகாடவியைப் பூமியின்கண் பின்னைப்பிராட்டிக்களித்த மாயோன்கருணையாகிய வமிர்தத்தை நூன்முகத்தான் ஞானத்தாற் பருகுவதன்றிப் பெற்றநற்றாயாகிய நங்கைதிருமுலைப்பாலையும் பிறந்த ஞான்று தொடங்கி யொருகாலத்துமுண்ணாதசேட்டத்தினையே முக்கியமாக விரும்பியதால், உலகத்தாரறிவழிய அவ்வறிவினோடும் பூசலைப் பெருக்கும் பஞ்சதன்மாத்திரைகண்முழுதையும் பொருது புறங்கண்ட வொள்ளியதன்மைத்தாம் அழகிய ஞானவீரியத்தானாகிய காரிமாறப் பிரான் என்சிந்தையைவிட்டு அகலா னென்றவாறு. ஆதலால் எனக்கியாது குறையென்பது இதன்பயன். திணை - வாகைசார்ந்தபுறத்திணை. துறை - ஞானவென்றி.

அண்டமென்றகன்றதையதனினுமகன்றுட்
கொண்டதாமண்டபித்தியையுட்கொளலாய்
வாங்குவெண்டிரைப்பெரும்புனலாவரிப்ப
வோங்குமாழ்புனலினையொளிருமங்காரக
னாங்ககலாநிலைமையினாவரிப்ப
வங்காரகன்றனையதிற்பதின்மடங்காய்